சங்கு ஊதும் போராட்டம்
2021-02-18@ 02:55:04

வாலாஜாபாத்: வாலாஜாபாத் ஒன்றிய அதிகாரிகளை கண்டித்து, ஐமிச்சேரி கிராம மக்கள் சங்கு ஊதும் போராட்டம் நடத்தினர். வாலாஜாபாத் ஒன்றியம் ஐமிச்சேரி ஊராட்சியில் குடிநீர் உள்பட பல்வேறு பிரச்னைகளை தீர்க்காத ஒன்றிய நிர்வாகத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, கிராம மக்கள் இணைந்து, நேற்று சங்கு ஊதும் போராட்டம் நடத்தினர். வட்ட செயலாளர் லாரன்ஸ் தலைமை தாங்கினார். அப்போது, கிராமத்தில் உள்ள குடிநீர் பிரச்னையை தீர்க்க வேண்டும். சாலை விரிவாக்கம் செய்தபோது பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும். நாவிட்டான் குளம் இந்து இருளர் வாழும் பகுதிக்கு மின் கம்பம் அமைத்து தெருவிளக்கு அமைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
மேலும் செய்திகள்
இடைக்கழிநாடு பேரூராட்சியில் மழைநீர் வடிகால்வாயில் கழிவுகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
ஊராட்சி தலைவர்களுக்கு பயிற்சி
மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கடப்பாரையால் அடித்து கொலை செய்த கணவன் போலீசில் சரண்
கும்மிடிப்பூண்டி அருகே மாதர்பாக்கம் ஊராட்சியில் டவர் அமைக்க எதிர்ப்பு; இடத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்
6 வழிச்சாலையால் பாதிக்கப்படும் விவசாயிகளுடன் விவசாய சங்க மாநில தலைவர் கலந்துரையாடல்; நீதமன்றத்தில் வழக்கு தொடர முடிவு
அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் போதை பழக்கத்திற்கு எதிராக மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!