பூச்சி முருகன் தலைமையில் வீட்டு வசதி வாரிய நிர்வாகிகள் மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு
2021-02-17@ 00:09:29

சென்னை: தமிழ்நாடு அரசு வீட்டு வசதி வாரிய தொ.மு.ச. பேரவை பொதுச்செயலாளர் பூச்சி எஸ்.முருகன் தலைமையில் வீட்டு வசதி வாரிய தொ.மு.ச. நிர்வாகிகள் மு.க.ஸ்டாலினை நேற்று நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். இதுகுறித்து, திமுக தலைமை கழகம் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு அரசு வீட்டு வசதி வாரிய கட்டுமான பணிக்கான டெண்டர் விட்டதில் 668 கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடு நடந்ததை வீட்டுவசதி வாரிய தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்தினர் ஆதாரங்களுடன் வெளியில் கொண்டு வந்து நீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்தனர்.
இந்த விவகாரம் குறித்து விருதுநகரில் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சியில் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசும்போது அழுத்தம் கொடுக்கவே இப்போது அந்த டெண்டர்கள் தமிழக அரசால் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது தலைவர் மு.க.ஸ்டாலினின் பேச்சுக்கு கிடைத்த பெரிய வெற்றி. அதற்காக வீட்டுவசதி வாரிய தொ.மு.ச. பேரவை சார்பில் அதன் பொதுசெயலாளர் பூச்சி எஸ்.முருகன் தலைமையில் சங்க வழக்கறிஞர்கள் புகழ் காந்தி, முத்துக்குமார் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில், நேற்று நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
Tags:
Meeting of Poochi Murugan Chairman Housing Board Administrators MK Stalin பூச்சி முருகன் தலைமை வீட்டு வசதி வாரிய நிர்வாகிகள் மு.க.ஸ்டாலின் சந்திப்புமேலும் செய்திகள்
விவசாயிகள் நலனுக்காக 7 தொலைநோக்கு திட்டங்களை உருவாக்கி உள்ளோம் : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!!
ரூ.227 கோடி மதிப்பிலான கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!!
பெட்ரோல், டீசல் விலையை மாநில அரசு குறைக்கும் என நம்பிக்கை இருக்கிறது: அண்ணாமலை பேட்டி
பெட்ரோல், டீசல் விலையை தமிழக அரசு குறைக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்
தமிழகத்தில் மதுவிலக்கு: ராமதாஸ் வலியுறுத்தல்
பெட்ரோல், டீசல் விலை குறைப்பு பிரதமருக்கு நன்றி தெரிவித்து ஓபிஎஸ் கடிதம்
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்