பாகிஸ்தான் உதவியுடன் சியாச்சினை சீனா பிடிக்கும்: காங். எச்சரிக்கை
2021-02-15@ 00:09:23

புதுடெல்லி: டெல்லியில் முன்னாள் பாதுகாப்பு அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஏ.கே.அந்தோணி நேற்று அளித்த பேட்டி: இந்தியா தனது எல்லையில் பாகிஸ்தான், சீனாவின் அச்சுறுத் தல்களை சந்தித்து வரும் நிலையில், பட்ஜெட்டில் பாதுகாப்பு துறைக்கான நிதி ஒதுக்கீடு அற்பமான அளவுக்கு மட்டுமே உயர்த்தப்பட்டிருக்கிறது. ராணுவத்திற்கு முக்கியத்துவம் தராமல், நாட்டிற்கு துரோகம் செய்துள்ளனர். இதே போல், கல்வான் பள்ளத்தாக்கு மற்றும் பாங்காங்க் திசோ ஏரிப் பகுதியில் படைகளை விலக்கிக் கொள்ள சீனாவுடன் இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது. இவ்விரு பகுதியிலும் படைகளை விலக்குவது என்பது சீனாவிடம் சரணடைவதற்கு சமமாகும். 1962ல் கூட கல்வான் பள்ளத்தாக்கு பிரச்னைக்குரிய நிலமாக இருந்ததில்லை. இவ்வாறு படைகளை விலக்குவது, பொதுவான பகுதிகளாக அறிவித்தல் ஆகியவை நமது நிலத்தை நாமே எடுத்து கொடுப்பது போலாகும். இதன் தீவிரத்தை பாஜ அரசு புரிந்து கொள்ளாவிட்டால், பாகிஸ்தான் உதவியுடன் அடுத்ததாக சீனா சியாச்சினில் கை வைத்து பிடிக்க முயற்சிக்கும் என்றார்.
Tags:
China will catch Siachen with Pakistan's help: Cong. Warning பாகிஸ்தான் உதவி சியாச்சினை சீனா பிடிக்கும் காங். எச்சரிக்கைமேலும் செய்திகள்
என்.எல்.சி.யில் இருந்து புதுச்சேரிக்கு விரைவில் குடிநீர் விநியோகம்: பேரவையில் அமைச்சர் லெட்சுமி நாராயணன் அறிவிப்பு
ஆந்திராவில் வாகனங்களின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கிய நபரை கைது செய்து போலீஸ் விசாரணை
அம்ரித்பால் தலைமறைவான இடத்தில் இருந்து வீடியோ வெளியீடு: கடவுள் அருளால் தப்பித்து வருவதாக பேச்சு
அறிய வகை நோய்களுக்கான மருந்துகளை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்கு முழுமையான வரிவிலக்கு அளித்து ஒன்றிய அரசு அரசாணை..!!
தேசிய கீதம் அவமதிப்பு வழக்கு: மம்தாவுக்கு எந்தவிதக் கருணையும் காட்டக்கூடாது மும்பை ஐகோர்ட் உத்தரவு..!!
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 3,000-ஐ தாண்டியது.... ஒரே நாளில் 14 பேர் பலி : ஒன்றிய சுகாதார அமைச்சகம் தகவல்!
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!