முதல் முறையாக சென்னையில் நடைபெறுகிறது 14 வது ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம்..! அதிகாரப்பூர்வ அறிவிப்பு
2021-01-27@ 14:45:32

சென்னை: 14-வது ஐபிஎல் போட்டி தொடருக்கான வீரர்கள் ஏலம் சென்னையில் பிப்ரவரி 18-ம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 57 வீரர்களை அணிகள் விடுவித்த நிலையில் ஐபிஎல் ஏலம் சென்னையில் நடைபெற உள்ளது. சென்னையில் முதல் முறையாக ஐபிஎல் போட்டி தொடருக்கான வீரர்கள் ஏலம் நடைபெறவுள்ளது.
2008 ஆம் ஆண்டிலிருந்து வருடந்தோறும் நடந்து வரும் ஐபிஎல் திருவிழா, கடந்த ஆண்டு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, இந்த வருடத்திற்கான ஐபிஎல் தொடர், வரும் ஏப்ரல்- மே மாதங்களில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் அணிகள் தங்கள் அணியில் இடம்பெற்றுள்ள முக்கிய வீரா்களை தக்கவைப்பதற்கான காலக்கெடு கடந்த 20-ஆம் தேதியோடு முடிவடைந்தது. புதிய வீரா்களை தோ்வு செய்யும் விதமாக 8 அணிகளும் தங்கள் வசமிருந்த வீரா்கள் பலரை விடுவித்துள்ளன. சிஎஸ்கே அணியிலிருந்து முரளி விஜய், கேதார் ஜாதவ், ஹர்பஜன் சிங், பியூஷ் சாவ்லா, மோனு சிங், ஷேன் வாட்சன் ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளார்கள். இதனைத் தொடர்ந்து, ஐபிஎல் ஏலம் வரும் பிப்ரவரி 18 ஆம் தேதி நடைபெறும் என ஏற்கனவே தகவல்கள் வெளியான நிலையில், அது தற்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வரும் 18 ஆம் தேதி நடைபெற இருக்கும் ஐ.பி.எல் ஏலம் சென்னையில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏலத்திற்கு தயாராகும் வகையில், ஐபிஎல் அணிகள் ஏற்கனவே தங்கள் அணிகளிலிருந்து குறிப்பிட்ட எண்ணிக்கையில் வீரர்களை விடுவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெறுமா அல்லது வெளிநாட்டில் நடைபெறுமா என்பதே இன்னும் முடிவு செய்யப்படவில்லை. ஆனால், பிசிசிஐ தலைவா் சௌரவ் கங்குலியோ, ஐபிஎல் போட்டியை இந்தியாவில் நடத்துவதற்கான அனைத்து சாத்தியங்களும் உள்ளதாக தொடா்ந்து கூறியுள்ளார். இந்தியா-இங்கிலாந்து இடையிலான கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் இந்தியாவில் நடைபெறுகிறது. அந்தத் தொடா் சுமுகமாக முடிவடையும்பட்சத்தில், ஐபிஎல் போட்டியை இந்தியாவில் நடத்துவதற்கான வழி ஏற்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
மேலும் செய்திகள்
விஜய் ஹசாரே டிராபி அரையிறுதியில் குஜராத்: ஆந்திரா ஏமாற்றம்
3வது டி20ல் இலங்கை ஏமாற்றம் தொடரை வென்றது வெ.இண்டீஸ்
டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் லார்ட்சில் இருந்து மாற்றம்
கொரோனா பரவல் எதிரொலி: டெஸ்ட் உலகக்கோப்பை இறுதிப்போட்டி நடைபெறும் இடம் மாற்றம்; சவுரவ் கங்குலி தகவல்
பன்ட், சுந்தர் ரன் குவிக்கும்போது இங்கி. வீரர்களால் முடியாதா?: சோயிப் அக்தர் கேள்வி
இலங்கைக்கு எதிரான கடைசி டி.20: 3 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி...2-1 என தொடரை கைப்பற்றியது
ஆஸ்திரேலியாவில் உழைப்பாளர் தின கொண்டாட்டம்!: வானில் பறக்கவிடப்பட்ட பிரம்மாண்ட ராட்சத பலூன்கள்..!!
நாட்டிலேயே முதல் முறையாக தெலுங்கானாவின் காவல் நிலையத்தில் "திருநங்கைகள் சமூக மேடை"! புகைப்படங்கள்
செவ்வாய் கிரகத்தில் உள்ள மலைகள், பாறைகளுடன் கூடிய புதிய புகைப்படங்ளை பூமிக்கு அனுப்பியது பெர்சிவரன்ஸ் ஆய்வூர்தி!!
08-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
07-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்