குடியரசு தினவிழா முதல்வர் வாழ்த்து
2021-01-27@ 03:29:09

புதுடெல்லி: குடியரசு தினவிழாவை முன்னிட்டு விவசாயிகள், கொரோனா போராளிகள் மற்றும் ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்துவதாக கூறியுள்ள முதல்வர் கெஜ்ரிவால் டெல்லி மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து உள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் கெஜ்ரிவால் வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில் கூறியிருப்பதாவது: கடந்த ஒரு ஆண்டில் குடியரசு இந்தியாவின் ஒற்றுமை மற்றும் பலத்தை பல்வேறு தருணங்களில் பார்க்க முடிந்தது. டாக்டர்கள், நர்ஸ்கள் தங்கள் உயிரையும் பணயம் வைத்து பணியாற்றியதை நாம் அனைவரும் பார்த்தோம். துப்புரவு பணியாளர்கள் சுகாதாரத்தை மேம்படுத்தியதை பார்த்தோம். தீரமான ராணுவ வீரர்கள் நமது நாட்டை காத்தனர். மனித இனத்தின் வரலாற்றில் மிகப்பெரிய தொற்றுநோய்களுக்கு மத்தியில் இந்த மாபெரும் குடியரசின் மக்களுக்கு சேவை செய்யும் எங்கள் போராளிகளின் அர்ப்பணிப்பு பணியை கடந்த ஒருவருடமாக நாம் கண்டோம். கடினமான நேரத்தில் தங்கள் பணியை திறம்படி செய்த உண்மையான பணியாளர்களுக்கு ஒட்டுமொத்த இந்தியாவும் மரியாதை செலுத்துகிறது. புதிய நம்பிக்கையுடனும், கனவுகளுடனும் உலகின் மிகப்பெரிய குடியரசு நாட்டின் 72வது குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்
கொரோனாவால் பாதிக்கப்பட்டு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மருத்துவமனையில் அனுமதி: விரைந்து குணமடைய ராகுல் காந்தி வாழ்த்து.!!!
நாடு முழுவதும் மே 1-ம் தேதி முதல் 18 வயது நிரம்பிய அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி.!!!
மராட்டியத்தில் பிரக் ஃபார்மா கிடங்கில் ரெம்டெசிவிர் மருந்து பதுக்கல்; பதுக்கலுக்கு உதவும் பாஜக: மராட்டிய அரசு பகிரங்க குற்றச்சாட்டு
கொரோனாவை கட்டுப்படுத்த தவறிய பிரதமர் மோடி பதவி விலக வேண்டும்.. தேசிய அளவில் டிரெண்டாகும் #ResignModi ஹேஷ்டேக்
கடந்த ஆண்டைப்போன்று மீண்டும் அரங்கேறும் பரிபாதக் காட்சிகள்: நெடுஞ்சாலைகளில் நடக்கத் தொடங்கிய புலம்பெயர் தொழிலாளர்கள்
பலூன்களால் அலங்கரித்தல்... சாதனைகளை விளக்கும் உரை...புகைப்படம் எடுத்தல் :ஆக்சிஜன் லாரியை வைத்து அற்ப விளம்பரம் செய்த பாஜக!!
ஸ்பெயினில் வகுப்பறையாக மாறிய கடற்கரை!: தனிமனித இடைவெளியுடன் ஆர்வமுடன் கல்வி கற்கும் மாணவர்கள்..!!
19-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!
தீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு!: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..!!