பத்மஸ்ரீ விருது பெற்ற பாப்பம்மாளுக்கு மு.க.ஸ்டாலின் சால்வை அணிவித்து பாராட்டு
2021-01-27@ 02:02:37

கோவை: பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்ட கோவை மாவட்டத்தைச் சேர்ந்த 105 வயது மூதாட்டி பாப்பம்மாளை நேரில் சந்தித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்தார். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கோவையில் முன்னாள் எம்.பி. கே.சி.பழனிச்சாமி இல்ல திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் நேற்று கோவை வந்தார். அவருக்கு விமான நிலையத்தில் தி.மு.க.வினர் வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து தனியார் விடுதிக்கு சென்ற அவர், பத்மஸ்ரீ விருது பெற்ற கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டியை சேர்ந்த பாப்பம்மாளை (105) சந்தித்தார். அவருக்கு மு.க.ஸ்டாலின் சால்வை அணிவித்து பாராட்டினார். பாப்பம்மாள் கூறும்போது, ‘‘விவசாய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இது போன்ற விருதுகள் கொடுத்து ஊக்கப்படுத்தும்போது விவசாய தொழில் மேம்படும். இந்த விருது மூலம் உலகமே என்னை பற்றி பேசுவது மகிழ்ச்சி அளிக்கிறது. எனக்கு விருது வழங்கப்பட்டு இருப்பது அனைத்து விவசாயிகளுக்கான கவுரவம். இந்த விருது பலரையும் இயற்கை விவசாயத்துக்கு திருப்பிவிடும் என நினைக்கிறேன்’’ என்றார்.
மேலும் செய்திகள்
தமிழகத்தில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள சிலைகளை அகற்ற வேண்டும்: உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
நெல்லை - சென்னை: அதிகாலை 4.30 மணி முதல் காலை 9 மணி வரை பேருந்துகளை இயக்க அரசு விரைவு போக்குவரத்து கழகம் முடிவு
தமிழகத்தில் பொது இடங்களில் உள்ள அனுமதி பெறாத சிலைகளை அகற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
திருச்சி ரயில்வே மருத்துவமனையில் தடுப்பூசி தட்டுப்பாடு; கடந்த 2 நாட்களாக தடுப்பூசி போடும் பணி நிறுத்தம்..!
மாவட்டத்தில் கொரோனா தடுப்பு விதிமுறைகள் கடுமையாக பின்பற்றப்படும்: தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை: நெல்லை ஆட்சியர் பேட்டி.!!!!
கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் நிகழ்வை நடத்த உத்தரவிட முடியாது: உயர்நீதிமன்ற மதுரை கிளை திட்டவட்டம்..!
ஸ்பெயினில் வகுப்பறையாக மாறிய கடற்கரை!: தனிமனித இடைவெளியுடன் ஆர்வமுடன் கல்வி கற்கும் மாணவர்கள்..!!
19-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!
தீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு!: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..!!