கங்கனாவை பார்க்க நேரமிருக்கு... விவசாயிகளை சந்திக்க நேரமில்லையா?... மகாராஷ்டிரா ஆளுநர் மீது சரத்பவார் காட்டம்
2021-01-26@ 19:49:07

மும்பை: டெல்லியின் எல்லையில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக, இன்று மகாராஷ்டிராவின் 21 மாவட்டங்களைச் சேர்ந்த 15,000 விவசாயிகள் மும்பையின் ஆசாத் மைதானத்திலிருந்து ஆளுநர் மாளிகைக்கு நடைபயணம் மேற்கொள்கின்றனர். மும்பை ஆசாத் மைதானம் முன்பாக விவசாயிகள் பேரணி நடைபெறுவதால், ஏராளமான போலீஸ் படைகள் மற்றும் சிஆர்பிஎஃப் போலீசார் முன்னெச்சரிக்கையாக நிறுத்தப்பட்டுள்ளனர். அணிவகுப்பு பாதை மற்றும் ஆசாத் மைதானம் முழுவதும் ட்ரோன்கள் மூலம் கண்காணிக்கப்படுகின்றன.
ஆளுநர் மாளிகைக்கு வெளியே கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கொரோனாவின் அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு, ஆசாத் மைதானத்தில் மருத்துவர்கள் குழுவை மும்பை மாநகராட்சி தயாராக வைத்துள்ளது. முன்னதாக ஆசாத் மைதானத்துக்கு வந்த தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் விவசாயிகளின் முன் ஆற்றிய உரையில், ‘இந்த போராட்டம் சாதாரணமானது அல்ல. மத்தியில் ஆட்சியில் இருப்பவர்கள் நாட்டில் உழைக்கும் மக்களைப் பற்றி கவலைப்படுவதில்லை. கிட்டத்தட்ட 60 நாட்களுக்கு மேலாக டெல்லியில் விவசாயிகள் கடுமையான குளிரையும் பொருட்படுத்தாது தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பிரதமர் அவர்கள் குறித்து எப்போதாவது பேசியிருக்கிறாரா? மகாராஷ்டிரா மாநிலத்தில் தற்போதுள்ள ஆளுநரை போன்று இதுவரை எந்தவொரு ஆளுநரையும் நான் பார்த்ததில்லை. மகாராஷ்டிரா ஆளுநரை சந்திக்க நேரம் ஒதுக்க கேட்டோம். ஆனால், விவசாயிகள் தன்னை சந்திக்க வருகிறார்கள் என்பதை அறிந்த அவர், கோவாவுக்குச் சென்று விட்டார். அவருக்கு நடிகை கங்கனாவைச் சந்திக்க நேரம் இருக்கிறது. ஆனால் விவசாயிகளைச் சந்திக்க நேரமில்லை’ என்றார்.
விளம்பரத்திற்காக பேரணி:
வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி மும்பையில் ராஜ்பவன் நோக்கி விவசாயிகள் பிரமாண்ட பேரணி நடத்தினர். ஆளுநரை சந்திக்க முடியாததால் ஆவேசம் அடைந்த அவர்கள் கோரிக்கை மனுவை கிழித்தெறிந்தனர். இதற்கிடையே மும்பையில் விளம்பரத்துக்காக விவசாயிகள் போராட்டம் நடத்தப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே குற்றம் சாட்டி உள்ளார். மத்திய அமைச்சரின் இந்த கருத்துக்கு தேசியவாத காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது
மேலும் செய்திகள்
FasTag முறையால் ஆண்டுக்கு ரூ.20,000 கோடி அளவுக்கு எரிபொருள் செலவு மிச்சமாகும்!: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்..!!
சென்னை தி.நகரில் இல்லத்தில் சசிகலாவுடன் டிடிவி தினகரன் ஆலோசனை
புதுச்சேரியில் நாளை முதல் பள்ளிகள் வழக்கம் போல முழு நேரமும் இயங்கும்!: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..!!
வீரியம் குறையாத கொரோனா!: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 12,286 பேர் பாதிப்பு..மேலும் 91 பேர் உயிரிழப்பு..!!
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைக்க மத்திய நிதி அமைச்சகம் பரிசீலனை
முடிவுக்கு வருமா விவசாயிகள் போராட்டம்..? டெல்லி எல்லையில் 100-வது நாளை நெருங்கும் விவசாயிகள் போராட்டம்
02-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!: புகைப்படங்கள்
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி!: போராட்டக்காரர்கள் மீதான துப்பாக்கி சூட்டில் 18 பேர் பலி...உச்சக்கட்ட பதற்றம்..!!
இத்தாலியில் 2,000 ஆண்டுகள் பழமையான தேர் எரிமலை சாம்பலில் கிடைத்தது
01-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்