அவன் இவன் பட வழக்கு: அம்பை கோர்ட்டில் டைரக்டர் பாலா ஆஜர்
2021-01-26@ 16:43:43

அம்பை: பாலா இயக்கத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திரையிடப்பட்ட ‘அவன் இவன்’ படத்தில் சிங்கம்பட்டி ஜமீன், காரையார் சொரிமுத்து அய்யனார் கோயில் பற்றிய சர்ச்சைக்குரிய வகையில் காட்சிகள் இடம்பெற்றதாக அம்பை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சிங்கம்பட்டி ஜமீன் தீர்த்தபதிராஜா மகன் சங்கர் ஆத்மஜன் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கு தொடர்பான விசாரணை அம்பை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள குற்றவியல் நீதிமன்றத்தில் நேற்று நடந்தது. இதையொட்டி டைரக்டர் பாலா நேரில் ஆஜராகினார். அப்போது மாஜிஸ்திரேட் கார்த்திகேயன் நடத்திய விசாரணையின்போது படத்தில் வரும் கதாபாத்திரமும், கதையும் கற்பனை என்றும்,
இவ்வாறு வழக்குத் தொடர்வதின் மூலம் பண ஆதாயம் பெறுவதற்காக மட்டுமே புனையப்பட்ட பொய் வழக்கு என்றும் கூறியதாகத் தெரிகிறது. இதையடுத்து வழக்கு விசாரணையை பிப். 8ம்தேதிக்கு ஒத்திவைத்த மாஜிஸ்திரேட் அப்போது மீண்டும் ஆஜராகும்படி பாலாவுக்கு உத்தரவிட்டார். இவ்வழக்கில் மனுதாரர் சங்கர் ஆத்மஜன் சார்பாக வக்கீல் ரமேஷ் ஆஜரானார். இயக்குநர் பாலா சார்பில் வக்கீல்கள் முகமது உசேன், நயினார் முகமது ஆகியோர் ஆஜராகி இருந்தனர்.
மேலும் செய்திகள்
தமிழகம் முழுவதும் சட்டமன்ற தேர்தலுக்காக நடந்த எஸ்.ஐ.க்கள் இடமாற்றம் ரத்து: சொந்த மாவட்டங்களில் பணிபுரிய அனுமதி
கூடங்குளம் முதல் அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தம்
எடப்பாடி, ஓபிஎஸ், அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் படத்துடன் 3,030 நோட்டு புத்தகங்கள் பறிமுதல்: கரூர் அருகே பறக்கும் படை அதிரடி
கன்னியாகுமரியில் கலெக்டர் பாராகிளைடரில் பறந்து விழிப்புணர்வு பிரசாரம்: 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி சாகசம்
தமிழகத்தில் பாஜ போட்டியிடும் 20 இடத்தில் வெற்றி பெறுவது மட்டுமே நமது லட்சியம்: எல்.முருகன் முன்னிலையில் நிர்வாகி பேசியதால் பரபரப்பு
ரேஷன் அரிசி கடத்தியவருக்கு ஜாமீன் காப்பகத்திற்கு பொன்னி அரிசி வழங்க நிபந்தனை