பேட்டை கோடீஸ்வரன் நகர் பகுதியில் காஸ் சிலிண்டருக்கு கூடுதல் கட்டணம் வசூல்
2021-01-26@ 12:53:29

பேட்டை : கோடீஸ்வரன் நகர் பகுதியில் காஸ் சிலிண்டருக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் ஏஜென்சிகளால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை நாளுக்குநாள் உயர்ந்து கொண்டே சென்றாலும், அதன் பயன்பாடு குறைந்தபாடில்லை. அரசு, சிலிண்டருக்கு உரிய விலை நிர்ணயம் செய்து தனியார் ஏஜென்சிகள் மூலம் பொதுமக்களுக்கு விநியோகம் செய்து வருகிறது. அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் வரும் காஸ் சிலிண்டருக்கான பில்லிங் தொகையை டெலிவரி செய்ய வரும் நபரிடம் கஸ்டமர்கள் செலுத்தி பெற்று கொள்வர். பில்லிங் தொகை தவிர மாடிகளில் ஏற்றி இறக்க வேண்டிய சூழலில் மக்களே கூடுதலாக பத்து அல்லது இருபது ரூபாய் கொடுப்பது வழக்கம்.
இந்நிலையில் பேட்டை, கோடீஸ்வரன் நகர் பகுதியில் காஸ் சிலிண்டருக்கு பில்லிங் தொகை தவிர கூடுதலாக 65 ரூபாய் கேட்டு அடாவடி வசூல் செய்வதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சிலர் வேறு வழியின்றி, மறுமுறை சிலிண்டர் வழங்குவதில் தாமதித்து விடக்கூடாது என்று எண்ணி கேட்கும் கூடுதல் தொகையை கொடுத்து பெறுகின்றனர். டெலிவரி பாய்களின் இந்த அடாவடி வசூலால் மக்கள் கடும் மன உளைச்சலுக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.
எனவே இவ்விவகாரத்தில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு காஸ் சிலிண்டருக்கு கூடுதல் தொகை வசூலிக்கும் நபர்கள், ஏஜென்சி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டு உள்ளது.
மேலும் செய்திகள்
வட மாநிலங்களில் ஊரடங்கு காரணமாக ஈரோட்டில் ரூ.100 கோடி ரேயான் துணிகள் தேக்கம்
கொரோனாவால் பள்ளி, கல்லூரிகள் திறக்காததால் நோட்டு, புத்தகங்கள் தயாரிக்கும் பணிகள் ஓராண்டாக முடக்கம்
சேலம், ஏற்காடு தொகுதியில் பதிவான வாக்கு இயந்திரம் உள்ள அறை முன்பு செல்போனில் பேசிய சிஆர்பிஎப் வீரர்: வேறு பணிக்கு மாற்றம் செய்து உத்தரவு
தென்காசி வாக்கு எண்ணும் மையம் அருகே நவீன வசதிகள் கொண்ட கன்டெய்னர்: திமுகவினர் புகாரால் அகற்றம்
அதிமுக மாஜி அமைச்சர் காலமானார்
மதுரையில் பெரும் பரபரப்பு வாக்கு எண்ணிக்கை மையத்தில் அத்துமீறி நுழைந்த மர்ம நபர்கள்: நடவடிக்கை கோரி திமுக வேட்பாளர்கள் போராட்டம்
19-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!
தீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு!: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..!!
22-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்