பெரியபாளையம் காவல் நிலையத்தில் வீணாகும் பறிமுதல் வாகனங்கள்
2021-01-26@ 02:09:35

ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் காவல் நிலையத்தில் துருபிடித்து வீணாகும் பறிமுதல் வாகனங்களை ஏலம்விட பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பெரியபாளையம் காவல் நிலையத்தின் கட்டுப்பாட்டில் 70 கிராமங்கள் உள்ளன. இதில், ஒரு இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் உட்பட 30க்கும் மேற்பட்ட போலீசார் பணியாற்றி வருகின்றனர். குடித்து வாகனம் ஓட்டுபவர்கள், மணல் கடத்தல், செம்மரம் கடத்தல், ரேஷன் அரிசி கடத்தல் ஆகியவைகளுக்கு பயன்படுத்திய கார், பைக், வேன், லாரி ஆகியவைகளை போலீசார் பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் நிறுத்தி வைத்துள்ளனர்.
மேலும், விபத்தில் சிக்கிய வாகனங்கள் என நூற்றுக்கணக்கான வாகனங்கள் பெரியபாளையம் காவல் நிலைய வளாகத்திலும், காவலர் குடியிருப்பு அருகிலும் பல மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதில், அதிக அளவு பைக்குகளே உள்ளன. இந்த வாகனங்கள் வெயில், மழையில் நனைந்து எதற்குமே உதவாமல் துருபிடித்து காயலான் கடைக்கு செல்லும் அளவுக்கு உருக்குலைந்து கிடக்கின்றன.
மணல் கடத்தலில் பறிமுதல் செய்த லாரிகள், பொக்லைன் இயந்திரங்கள், டிராக்டர், மாட்டு வண்டி பல மாதங்களாக மக்கி மண்ணோடு மண்ணாகி வருகிறது. எனவே, இந்த வாகனங்களை ஏலம் விட வேண்டும். வாகனங்கள் மீது உள்ள வழக்குகளை விரைந்து முடித்து உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் அல்லது வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என வாகன உரிமையாளர்கள், பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரி, காரைக்காலிலும் 9, 10, 11-ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்படுமா? அதிகாரிகளுடன் அளுநர் தமிழிசை 2-வது முறையாக ஆலோசனை
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி இன்று மாவட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை
பெண் எஸ்பி பாலியல் புகார் கொடுத்த விவகாரம்: பெண் ஐபிஎஸ் அதிகாரியிடம் சிபிசிஐடி விசாரணை: 4 மணி நேரம் நடந்தது
தலைமை ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வை ஏப்.30க்குள் நடத்த வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு
ஓய்வூதிய திட்டத்தில் பிடித்தம் செய்த நிதியை தவறாக கையாள்வதால் அரசுக்கு 1,500 கோடி இழப்பு: ஆர்டிஐ மூலம் அதிர்ச்சி தகவல் அம்பலம்
தனியார் பொறியியல் கல்லூரியில் இயக்கப்படாத பேருந்துக்கு கட்டணம் செலுத்த நெருக்கடி: மாணவர்கள் திடீர் சாலை மறியல்
03-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ்!: இன்றும் மத்திய, மாநில அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் போட்டுக்கொண்டனர்..!!!
அனல் பறக்கும் அரசியலுக்கு நடுவே, தோட்ட தொழிலாளர்களுடன் இணைந்து தேயிலை பறிக்கும் பிரியங்கா காந்தி!: புகைப்படங்கள்
02-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!: புகைப்படங்கள்