குடும்பத்துடன் தற்கொலை முயற்சியில் 3 பேர் பலி உயிர் பிழைத்த பிளம்பர் தூக்கிட்டு தற்கொலை
2021-01-25@ 01:32:56

பெரம்பூர்: கடன் பிரச்னையால் குடும்பத்தினர் 3 பேர் தற்கொலை செய்துகொண்ட நிலையில், உயிர் பிழைத்த பிளம்பர் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். சென்னை திருவிக நகர் அடுத்த வெற்றி நகர், ராமசாமி தெருவை சேர்ந்தவர் பழனி (46), பிளம்பர். இவர், நேற்று காலை படுக்கை அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது தந்தை சண்முகம், திருவிக நகர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பழனி கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில், பழனிக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு, கடன் இருந்தாக கூறப்படுகிறது. கடந்த வருடம் அக்டோபர் மாதம் 17ம் தேதி பழனி அவரது மனைவி பவானி (40), மகள் தேவதர்ஷினி (17), மகன் பிரகதீஷ் (11) ஆகிய 4 பேரும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர். இதில், பழனி மட்டும் தீவிர சிகிச்சைக்கு பிறகு உயிர் பிழைத்தார். மற்ற மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குடும்பத்தினர் இறந்ததால் மன உளைச்சலில் இருந்த பழனி, திருவல்லிக்கேணியில் உள்ள அவரது நண்பர் வீட்டில் தங்கி இருந்தார். கடந்த 10 நாட்களுக்கு முன், தந்தை சண்முகத்தை பார்க்க சொந்த வீட்டிற்கு வந்த பழனி, நேற்று தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
Tags:
Family suicide attempt 3 killed surviving plumber hanged suicide குடும்பம் தற்கொலை முயற்சி 3 பேர் பலி உயிர் பிழைத்த பிளம்பர் தூக்கிட்டு தற்கொலைமேலும் செய்திகள்
அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்கும் பிரிவை எதிர்த்து வழக்கு: தேர்தல் ஆணையம் பதில்தர ஐகோர்ட் உத்தரவு
உலக மகளிர் தினம் கொண்டாட்டம் தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து
நிலக்கரி இறக்குமதி விவகாரம்: 1,330 கோடி டெண்டரை ரத்து செய்ய கோரிய வழக்கு தள்ளுபடி: ஐகோர்ட் உத்தரவு
சென்னையில் விதி மீறல்களை கண்காணிக்க 12 தனிப்படைகள் அமைப்பு
அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு
தமிழக சட்டப்பேரவையில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கு பிரதிநிதித்துவம் கோரி வழக்கு: மத்திய அரசு முடிவெடுக்க ஐகோர்ட் உத்தரவு
ஆஸ்திரேலியாவில் உழைப்பாளர் தின கொண்டாட்டம்!: வானில் பறக்கவிடப்பட்ட பிரம்மாண்ட ராட்சத பலூன்கள்..!!
நாட்டிலேயே முதல் முறையாக தெலுங்கானாவின் காவல் நிலையத்தில் "திருநங்கைகள் சமூக மேடை"! புகைப்படங்கள்
செவ்வாய் கிரகத்தில் உள்ள மலைகள், பாறைகளுடன் கூடிய புதிய புகைப்படங்ளை பூமிக்கு அனுப்பியது பெர்சிவரன்ஸ் ஆய்வூர்தி!!
08-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
07-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்