வளசரவாக்கத்தில் ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் புதிய ஷோரூம் திறப்பு
2021-01-25@ 00:31:52

சென்னை: ஜிஆர்டி ஜூவல்லர்ஸின் புதிய ஷோரூம் வளசரவாக்கத்தில் திறக்கப்பட்டுள்ளதை முன்னிட்டு வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு அறிமுக சலுகைகள் வழங்கப்படுகிறது. பழைய தங்க நகைகளை எக்ஸ்சேஞ்ச் செய்யும்போது ஒரு கிராமுக்கு ரூ.50 கூடுதலாக பெறலாம், தங்க நகைகள் வாங்கும்போது ஒரு கிராமுக்கு ரூ.50 குறைவாகவும், வைர நகைகளுக்கு காரட்டுக்கு ரூ.5000 குறைவாகவும் செலுத்தலாம். அதுமட்டுமின்றி ஒவ்வொரு விதமான வாடிக்கையாளர்களுக்கும் தனிப்பட்ட சலுகைகளும் உண்டு. வெள்ளி பொருட்களுக்கு செய்கூலியில் 25% தள்ளுபடி மற்றும் வெள்ளி நகைகளுக்கு MRPயில் 10% குறைவு போன்ற சலுகைகளும் உள்ளன. இந்த சலுகைகள் வளசரவாக்கம் ஷோரூமில் மட்டுமே கிடைக்கும்.
இதுகுறித்து ஜிஆர்டி மேலாண்மை இயக்குநர் G.R.‘அனந்த்’ அனந்தபத்மநாபன் கூறுகையில், ‘‘வளசரவாக்கத்தில் எங்களது ஷோரூமை திறந்துள்ளதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு மேலும் நெருங்கி வந்துள்ளோம். பல்வேறு டிசைன்களில் பிரமிப்பூட்டும் விதத்தில் கலெக்ஷன்கள் குவிந்துள்ள இந்த புதிய ஷோரூமில் ஷாப்பிங் செய்யும் அனுபவத்தை மேலும் சந்தோஷமாக மாற்றவே பல்வேறு அறிமுகச் சலுகைகளையும் வழங்கியுள்ளோம்,’’ என்றார். ஜிஆர்டி நிர்வாக இயக்குனர் G.R.ராதாகிருஷ்ணன் கூறுகையில், ‘‘இந்த பண்டிகை காலத்தில் எங்களது சிறப்பு அறிமுக சலுகைகள் சிறப்பு பரிசுகளுடன் இணைந்து இந்த புதிய ஷோரூம் வெற்றிகளை பெறும் என்று உறுதியாக நம்புகிறோம். வாடிக்கையாளர்கள் இந்த ஷோரூமிற்கு வந்து பிரம்மாண்ட கலெக்ஷன்களை பார்வையிட வேண்டும்,’’ என்றார்.
Tags:
Valasaravakkam GRT Jewelers opening a new showroom வளசரவாக்கம் ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் புதிய ஷோரூம் திறப்புமேலும் செய்திகள்
ஸ்மார்ட் சிட்டி கடைகள் அமைப்பதை எதிர்த்து மாநகராட்சி அதிகாரிகளை கண்டித்து மெரினாவில் வியாபாரிகள் போராட்டம்: நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கைது
ராகுல்காந்தி பூரண நலம்பெற வேண்டி காங்கிரஸ் கட்சியினர் 108 பால்குட ஊர்வலம்
தமிழகத்தில் தினசரி பாதிப்பு 13,000ஐ தாண்டியது: கொரோனாவால் ஒரே நாளில் 13,776 பேர் பாதிப்பு; 78 பேர் பலி...சுகாதாரத்துறை அறிக்கை.!!!
வடசென்னை அனல் மின்நிலையத்தில் தொழில்நுட்ப கோளாறு: மின் உற்பத்தி பாதிப்பு..!
ஆன்லைன் முறையை பயன்படுத்துங்கள்..! தமிழகத்தில் முழு ஊரடங்கு நாட்களில் ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் இயங்காது: தெற்கு ரயில்வே அறிவிப்பு
கொரோனா தடுப்பூசி தொடர்பான அவதூறு வழக்கு: முன்ஜாமின் கோரி மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மன்சூர் அலிகான் மனுத்தாக்கல்..!
23-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆக்சிஜன் வாயு கசிந்து விபத்து: நாசிக் மருத்துவமனையில் மூச்சுத்திணறி 24 நோயாளிகள் பரிதாப மரணம்..!!
ஆக்சிஜன் சிலிண்டர் நிரப்பும் மையங்களுக்கு படையெடுக்கும் மக்கள்; இரவு, பகலாக நீண்ட வரிசையில் காத்திருப்பு; இந்தியாவில் அவலநிலை!!
குவியல் குவியலாக கொரோனா சடலங்கள் எரிப்பு.. ஆம்புலன்சில் காத்து கிடைக்கும் நோயாளிகள்.. கண்ணீர் ததும்ப வைக்கும் படங்கள்!!
அமெரிக்காவில் போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் கருப்பின சிறுமி பலி!: வெடித்தது பெரும் போராட்டம்..!!