கோயிலின் பூட்டை உடைத்து கொள்ளை
2021-01-25@ 00:31:45

ஊத்துக்கோட்டை: ஆரணி அடுத்த போந்தவாக்கம் கிராமத்தில் பெரியபாளையத்தம்மன் கோயில் உள்ளது. இந்த கோயில் கும்பாபிஷேகம் நடந்து இன்றுடன் 48 நாட்கள் ஆகின்றன. இதனால் காலை, மாலை என இரண்டு வேளையும் மண்டல பூஜை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று காலை கோயில் பூசாரி பூஜை செய்ய வந்தபோது கோயிலின் கதவில் பூட்டியிருந்த 3 பூட்டுகளும் உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர், உள்ளே சென்று பார்த்தபோது அம்மன் கழுத்தில் இருந்த 2 கிராம் தங்க தாலி பொட்டு மற்றும் உண்டியலில் இருந்த ரூ.10 ஆயிரம் ஆகியவை திருடுபோயிருந்தது. இதில், அதிர்ச்சியடைந்த பூசாரி கோயில் நிர்வாகிகளுக்கு தகவல் கொடுத்தார். புகாரின்பேரில் ஆரணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
திருமங்கலம் துணிக்கடையில் புடவை திருடிய பெண் கைது: 4 பேருக்கு வலை; கார் பறிமுதல்
சிறுமியை ஏமாற்றி திருமணம் வாலிபர் போக்சோவில் கைது
ராயப்பேட்டையில் தனியாக வசித்த 75 வயது மூதாட்டி பணத்திற்காக அடித்து கொடூர கொலை?: உடலில் ரத்தக்காயங்கள்; போலீஸ் விசாரணை
திருவாரூர் அருகே 4 வயது சிறுவனை எரித்துக்கொன்ற கொடூர தந்தை: ஜோதிடர் காரணமா? போலீசார் விசாரணை
தங்கம், லேப்டாப், சிகரெட் கடத்தல்: 3 பேர் கைது
உலக வங்கியில் வேலை வாங்கி தருவதாக மோசடி: சாப்ட்வேர் ஊழியர் கைது
100 நாட்களை எட்டிய டெல்லி விவசாயிகள் போராட்டம்.. 200 பேர் பலி.. மத்திய அரசு கோரிக்கைகளுக்கு பணியுமா ?
கலிபோர்னியாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து!: சீட்டுக்கட்டு போல் சரிந்து கிடக்கும் 35 பெட்டிகள்..!!
செவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கு பின்னடைவு!: தரையிறங்கிய சில நொடிகளில் சுக்குநூறாக வெடித்து சிதறியது "ஸ்டார் ஷிப்" ராக்கெட்..!!
தங்கும் அறை, தியேட்டர், பார் என சகல வசதிகளுடன் விண்வெளியில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட ஹோட்டல்..!
04-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்