பிரேசிலுக்கு போய்ச் சேர்ந்த இந்திய தடுப்பூசிகள்..! ராமாயண கதையை சித்தரிக்கும் படத்துடன் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த பிரேசில் அதிபர்
2021-01-24@ 08:47:03

டெல்லி; இந்தியா அனுப்பி வைத்த 20 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் பிரேசிலுக்கு போய்ச் சேர்ந்தன. அதற்கு ராமாயண கதையை சித்தரிக்கும் படத்துடன் பிரதமர் மோடிக்கு பிரேசில் அதிபர் நன்றி தெரிவித்துக் கொண்டார். கொரோனா தடுப்பூசிகளை அதிக அளவில் உற்பத்தி செய்யும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உருவெடுத்துள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசிகள், சுகாதார பணியாளர்களுக்கு போடப்பட்டு வருகின்றன. அதே சமயத்தில், அந்த தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய பல்வேறு நாடுகள் இந்தியாவை அணுகி உள்ளன. பூடான், நேபாளம், மாலத்தீவு போன்ற நாடுகளுக்கு இந்தியா மானிய உதவியாக அவற்றை வழங்கி உள்ளது.
சவுதி அரேபியா, தென்ஆப்பிரிக்கா, பிரேசில் போன்ற நாடுகளுக்கு வணிகரீதியாக அனுப்பி வருகிறது. கொரோனா பாதிப்பில் அமெரிக்கா, இந்தியாவுக்கு அடுத்து 3-வது இடத்தில் உள்ள பிரேசிலுக்கு நேற்று முன்தினம் 20 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகளை இந்தியா அனுப்பி வைத்தது. தடுப்பூசிகளுடன் சென்ற விமானம், சா பாலோ மாகாணத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு தரை இறங்கியது. அந்நாட்டு சுகாதாரத்துறை மந்திரி எட்வர்டோ பசுல்லோ வரவேற்றார். பின்னர், மற்றொரு விமானத்தில் தலைநகர் ரியோ டி ஜெனிரோவுக்கு தடுப்பூசிகள் கொண்டு செல்லப்பட்டன.
இதையடுத்து, பிரதமர் மோடிக்கு பிரேசில் அதிபர் ஜேர் போல்சனரோ நன்றி தெரிவித்துள்ளார். இதற்காக தனது சமூக வலைத்தளத்தில் ராமாயண சம்பவத்தை சித்தரிக்கும் படத்தை வெளியிட்டுள்ளார். ராமாயணத்தில், போரில் லட்சுமணன் காயமடைந்தபோது, அவரது உயிரை காப்பாற்றும் சஞ்சீவி மூலிகையை தேடிச்சென்ற அனுமன், அதை கண்டுபிடிக்க முடியாமல் மலையையே தூக்கி வந்தார். அதை குறிப்பிடும்வகையில், கொரோனா தடுப்பூசிகள், தடுப்பு மருந்து அடங்கிய குப்பிகள் ஆகியவை கொண்ட மலையை இந்தியாவில் இருந்து பிரேசிலுக்கு அனுமன் தூக்கிச் செல்வதுபோல் அந்த படம் அமைந்திருந்தது.
அதனுடன், பிரேசில் அதிபர் தனது பதிவில், ‘‘வணக்கம், பிரதமர் நரேந்திர மோடி. இந்தியா போன்ற ஒரு கூட்டாளியை பெற்றதை பெருமையாக கருதுகிறோம். தடுப்பூசி ஏற்றுமதி செய்ததற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று கூறியுள்ளார். அதற்கு பிரதமர் மோடி, டுவிட்டரில் பதில் அளித்துள்ளார். அதி்ல், ‘‘கொரோனாவுக்கு எதிரான போரில் பிரேசிலின் நம்பிக்கைக்கு உரிய கூட்டாளியாக இருப்பது எங்களுக்குத்தான் பெருமை. சுகாதாரத்துறையில் தொடர்ந்து ஒத்துழைப்பை வலுப்படுத்துவோம்’’ என்று கூறியுள்ளார். கடந்த ஆண்டு, கொரோனா சிகிச்சைக்காக, ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளை பிரேசிலுக்கு இந்தியா வழங்கியது. அப்போதும், இதே ராமாயண சம்பவத்தை குறிப்பிட்டு, பிரேசில் அதிபர் நன்றி தெரிவித்து இருந்தார்.
மேலும் செய்திகள்
சக்திவாய்ந்த நிலநடுக்கம் எதிரொலி: நியூசிலாந்தில் மீண்டும் சுனாமி எச்சரிக்கை...மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்.!!!
செவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கு பின்னடைவு!: தரையிறங்கிய சில நொடிகளில் சுக்குநூறாக வெடித்து சிதறியது 'ஸ்டார் ஷிப்' ராக்கெட்..!!
விடாமல் அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்...! உலக அளவில் பாதிப்பு எண்ணிக்கை 11.57 கோடியை தாண்டியது: 25.70 லட்சம் பேர் உயிரிழப்பு
ஆப்கானிஸ்தானில் ஊடகத்தை சேர்ந்த 3 பெண்கள் கொலைக்கு ஐஎஸ் பொறுப்பேற்பு
மியான்மரில் போராட்டம் ராணுவம் சுட்டு 8 பேர் பலி
அமெரிக்க பட்ஜெட் குழு இயக்குனர் நியமன பரிந்துரையை வாபஸ் பெற்றார் நீரா: அதிபர் பைடனுக்கு முதல் சறுக்கல்
100 நாட்களை எட்டிய டெல்லி விவசாயிகள் போராட்டம்.. 200 பேர் பலி.. மத்திய அரசு கோரிக்கைகளுக்கு பணியுமா ?
கலிபோர்னியாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து!: சீட்டுக்கட்டு போல் சரிந்து கிடக்கும் 35 பெட்டிகள்..!!
செவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கு பின்னடைவு!: தரையிறங்கிய சில நொடிகளில் சுக்குநூறாக வெடித்து சிதறியது "ஸ்டார் ஷிப்" ராக்கெட்..!!
தங்கும் அறை, தியேட்டர், பார் என சகல வசதிகளுடன் விண்வெளியில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட ஹோட்டல்..!
04-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்