பேரவை தேர்தல் கூட்டத்தில் பங்கேற்க அசாம் வந்தார் அமித் ஷா: பாஜகவினர் உற்சாக வரவேற்ப்பு
2021-01-23@ 15:40:19

கவுகாத்தி: அசாமில் ஆளும் பாஜக மீண்டும் ஆட்சியை தக்கவைக்க தீவிர தேர்தல் பிரசாரத்தில் இறங்கியுள்ளது. மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா இன்று அதிகாலை கவுகாத்தி வந்தடைந்தார். அவர், நாளை (ஜன. 24) கவுகாத்தியில் நடைபெறும் 2 பொதுக்கூட்டங்களில் பங்கேற்று தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். முன்னதாக, போடோலாந்து பிராந்திய கவுன்சில் கூட்டத்திலும் பங்கேற்கிறார். பாஜக துணைத் தலைவரும் அசாமின் கட்சிப் பொறுப்பாளருமான பைஜயந்த் ஜெய் பாண்டா தற்போது அசாமில் முகாமிட்டு அமித் ஷாவின் பேரணிக்கான ஏற்பாடுகளை கவனித்து வருகிறார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ‘உள்துறை அமைச்சர் ஒரு மாதத்திற்குள் இரண்டாவது முறையாக அசாமிற்கு வந்துள்ளார். போடோலாந்து பழங்குடியினர் கவுன்சில் பகுதியில் நடக்கும் அரசின் நலத்திட்டங்களை துவக்க வைத்து அங்கு நடக்கும் கூட்டத்தில் பங்கேற்கிறார். நல்பரியில் பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பேரணியில் உரையாற்றுவார்’ என்றார்.
மேலும் செய்திகள்
சித்தூரில் நோய் தொற்று அபாயம் நீவா நதியில் கலக்கும் கழிவுநீர்-நடவடிக்கை எடுக்க கோரிக்கை
திருச்சுழி தொகுதி தேர்தல் விவகாரம்!: திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்..!!
கும்பமேளாவில் பங்கேற்ற 19 கொரோனா நோயாளிகள் உத்தராகண்ட் மருத்துவமனையில் இருந்து தப்பி ஓட்டம் :பீதியில் வடஇந்தியா!!
டெல்லியில் இன்று இரவு முதல் 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு?.. அதிகாரப்பூர்வ அறிவிப்பை சற்று நேரத்தில் வெளியிடுகிறார் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்
இந்தியாவில் அதிவேகமாக பரவும் கொரோனா. பிரதமர் மோடி அவசர ஆலோசனை : முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறாரா ?
கொரோனா பரவலை தடுக்க டெல்லியில் ஒரு வாரம் முழு பொது முடக்கத்தை அமல்படுத்த திட்டம்
ஸ்பெயினில் வகுப்பறையாக மாறிய கடற்கரை!: தனிமனித இடைவெளியுடன் ஆர்வமுடன் கல்வி கற்கும் மாணவர்கள்..!!
19-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!
தீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு!: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..!!