சகுனிரங்கநாத கோவிலில் ரூ.11 லட்சம் காணிக்கை வசூல்
2021-01-22@ 01:46:37

சிக்கமகளூரு: வனப்பகுதியில் அமைந்துள்ள சகுனிரங்கநாத கோவில் உண்டியலில் ரூ. 11 லட்சம் காணிக்கை கிடைத்தது என்று தாலுகா அதிகாரி
ஜெகதீஷ் தெரிவித்தார். சிக்கமகளூரு மாவட்டம் கடூர் தாலுகா சக்கராயபட்ணா கிராமத்தை ஒட்டியுள்ள வனப்பகுதிக்குள் சகுனிரங்கநாதசாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி வெளியூர் பக்தர்களும் அதிகமாக வந்து செல்வது வழக்கம்.
அப்படி வரும் பக்தர்கள் தங்களின் வேண்டுதல்கள் நிறைவேறினால் சாமிக்கு காணிக்கை செலுத்துவார்கள். இந்நிலையில் இந்த ஆண்டு கடந்த மூன்று நாட்களுக்கு முன் கோவில் திருவிழா நடந்து முடிந்தது கொரோனா பாதிப்பு கராணமாக குறைந்த பக்தர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது. அப்படி வந்து சென்ற பக்தர்கள் செலுத்திய காணிக்கை நேற்று காலை தாசில்தார் முன்னிலையில் எண்ணப்பட்டது. இதில் ரூ. 11 லட்சம் காணிக்கை கிடைத்துள்ளது என துணை தாசில்தார் ஜெகதீஷ் தெரிவித்தார்.
மேலும் செய்திகள்
சித்தூரில் நோய் தொற்று அபாயம் நீவா நதியில் கலக்கும் கழிவுநீர்-நடவடிக்கை எடுக்க கோரிக்கை
திருச்சுழி தொகுதி தேர்தல் விவகாரம்!: திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்..!!
கும்பமேளாவில் பங்கேற்ற 19 கொரோனா நோயாளிகள் உத்தராகண்ட் மருத்துவமனையில் இருந்து தப்பி ஓட்டம் :பீதியில் வடஇந்தியா!!
டெல்லியில் இன்று இரவு முதல் 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு?.. அதிகாரப்பூர்வ அறிவிப்பை சற்று நேரத்தில் வெளியிடுகிறார் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்
இந்தியாவில் அதிவேகமாக பரவும் கொரோனா. பிரதமர் மோடி அவசர ஆலோசனை : முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறாரா ?
கொரோனா பரவலை தடுக்க டெல்லியில் ஒரு வாரம் முழு பொது முடக்கத்தை அமல்படுத்த திட்டம்
ஸ்பெயினில் வகுப்பறையாக மாறிய கடற்கரை!: தனிமனித இடைவெளியுடன் ஆர்வமுடன் கல்வி கற்கும் மாணவர்கள்..!!
19-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!
தீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு!: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..!!