கோட்டயத்தில் பரபரப்பு; அறையில் அடைத்து பெற்றோருக்கு உணவு கொடுக்காமல் சித்ரவதை: தந்தை மரணம்; தாய்க்கு சிகிச்சை- கொடூர மகன் மீது வழக்குப்பதிவு
2021-01-21@ 19:37:18

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கோட்டயத்தில் வயதான பெற்றோரை தனி அறையில் அடைத்து வைத்து உணவு கொடுக்காமல் சித்ரவதை செய்த மகன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில் உணவு கிடைக்காததால் தந்தை இறந்தார். தாய்க்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கேரள மாநிலம் கோட்டயம் அருகே முண்டக்கயம் பகுதியை சேர்ந்தவர் பொடியன் (80). இவரது மனைவி அம்மினி (76). இந்த தம்பதி தங்களது இளைய மகன் ரெஜியின் வீட்டில் வசித்தனர். ரெஜி கூலி வேலை செய்கிறார். இதற்கிடையே அவர் தனது வயதான பெற்றோருக்கு உணவு கொடுக்காமல், இருவரையும் வீட்டில் உள்ள ஒரு அறையில் அடைத்து வைத்து இருந்ததாக கூறப்படுகிறது.
வேறு யாரும் பெற்றோர் அருகில் சென்றுவிடாமல் இருக்கும் வகையின் அறையின் முன்பு நாயையும் கட்டி வைத்திருந்தார். இந்த நிலையில் நேற்று சுகாதார ஊழியர்கள் அந்த பகுதியில் கணக்கெடுப்பு நடத்தினர். அப்போது ரெஜியின் வீட்டில் கணக்கெடுப்பு நடத்தியபோது வயதான பெற்றோர் வீட்டில் உள்ள அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதைத் தொடர்ந்து சுகாதார ஊழியர்கள் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரித்தனர். தொடர்ந்து அறையை திறந்து பார்த்தனர். அப்போது வயதான 2 பேரும் உடல் மெலிந்து பரிதாப நிலையில் கிடந்தனர்.
அவர்கள் இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் பொடியன் பரிதாபமாக இறந்தார். பல நாட்களாக உணவு சாப்பிடாததால் அவர் இறந்தது தெரியவந்தது. அம்மினிக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் செய்திகள்
உலகின் 100 சிறந்த கல்வி நிறுவனங்களில் இந்திய அளவில் சென்னை ஐஐடி முதலிடம்
பிரதமர், துணை ஜனாதிபதி இல்லத்தை இணைக்கும் வகையில் புதிய நாடாளுமன்றத்தில் 3 சுரங்கப்பாதை: அசாதாரண நிலையை சமாளிக்க ஏற்பாடு
திருமண தகவல் மையம் மூலம் பெண்களை கவர ‘வேஷம்’ ‘டுபாக்கூர்’ ராணுவ அதிகாரி கைது: ஜனாதிபதியுடன் ‘போஸ்’ கொடுத்த படங்கள் பறிமுதல்
கொரோனா பரவல் எதிரொலி: உலகம் முழுவதும் ஒரு வருடத்தில் சுமார் 16.8 கோடி குழந்தைகள் பள்ளிக்கு ஆப்சென்ட்....யுனிசெப் அதிர்ச்சி தகவல்.!!!
நாட்டிலேயே மக்கள் வாழ சிறந்த நகரம் பெங்களூருக்கு முதல் இடம் வழங்கி மத்திய அரசு அங்கீகாரம் : சென்னைக்கு 4வது இடம்; கோவை 7ம் இடம்!!
விவசாயிகளுக்கு ஆதரவானவர்களை மத்திய அரசு மிரட்டுகிறது!: டாப்சி, அனுராக் காஷ்யப்-பின் வீட்டில் நடந்த ரெய்டு குறித்து ராகுல்காந்தி விமர்சனம்..!!
100 நாட்களை எட்டிய டெல்லி விவசாயிகள் போராட்டம்.. 200 பேர் பலி.. மத்திய அரசு கோரிக்கைகளுக்கு பணியுமா ?
கலிபோர்னியாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து!: சீட்டுக்கட்டு போல் சரிந்து கிடக்கும் 35 பெட்டிகள்..!!
செவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கு பின்னடைவு!: தரையிறங்கிய சில நொடிகளில் சுக்குநூறாக வெடித்து சிதறியது "ஸ்டார் ஷிப்" ராக்கெட்..!!
தங்கும் அறை, தியேட்டர், பார் என சகல வசதிகளுடன் விண்வெளியில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட ஹோட்டல்..!
04-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்