முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லம் வரும் 28ம் தேதி திறப்பு: பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்க முடிவு
2021-01-21@ 00:26:08

சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லம் வரும் 28ம் தேதி திறக்கப்படுகிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி காலமானார். இதையடுத்து அவர் வாழ்ந்த போயஸ்கார்டனில் உள்ள வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றப்படும் என்று கடந்த 2017 ஆகஸ்ட் 17ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதற்கு ஜெயலலிதா அண்ணன் மகன் தீபக், மகள் தீபா ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் ஜெயலலிதா வாழ்ந்த வீட்டை நினைவு இல்லமாக மாற்றும் முயற்சியாக பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. இதையடுத்து ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை அரசு கையகப்படுத்தியது. தொடர்ந்து, நினைவில்லமாக ஆக்குவதற்கு இழப்பீடாக தமிழக அரசு சார்பில் ₹68 கோடி செலுத்தப்பட்டன. இதையடுத்து ஜெயலலிதா வாழ்ந்த வீடு அரசுடமையானது.
இதை தொடர்ந்து, இதற்காக, சென்ைன மாவட்ட கலெக்டர் தலைமையில் 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு அக்குழுவின் 3 கட்டங்களாக ஆய்வு செய்தனர். அப்போது, ஜெயலலிதா இல்லத்தை பொதுமக்கள் பார்க்கும் வகையில் என்னென்ன ஏற்பாடுகள் செய்யலாம் என்பது தொடர்பாக ஆய்வு செய்து அரசிடம் தெரிவித்தனர். அதன்பேரில், தற்போது ஜெயலலிதா வாழ்ந்த இல்லத்தை நினைவிடமாக மாற்றும் பணியில் பொதுப்பணித்துறை கட்டுமான பிரிவு முதன்மை தலைமை பொறியாளர் ராஜா மோகன் தலைமையிலான பொறியாளர்கள் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒருபகுதியாக ஜெயலலிதா வீடு முழுவதும் வர்ணம் அடிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து, வீட்டில் எந்தெந்த பொருட்களை எங்கெங்கு வைக்கலாம் என்பது தொடர்பாக பட்டியிலிடப்பட்டுள்ளது.
அதில், ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள், அவர் பயன்படுத்திய பொருட்கள், பரிசு பொருட்கள், புத்தகங்கள், உள்ளிட்ட அனைத்தும் காட்சிப்படுத்தப்படுகிறது. மேலும், ஜெயலலிதா பூஜை அறைகளை பொதுமக்கள் பார்வைக்காக அனுமதிக்கப்படுகிறது. மேலும், ஜெயலலிதா இல்லத்தில் மார்பளவு கொண்ட சிலைகள் அமைக்கப்படுகிறது. இதற்கான பணிகள் வேகமாக நடந்து வருகிறது. இந்த நிலையில், போயஸ்கார்டன் இல்லத்தை வரும் 28ம் தேதி முதல் பொதுமக்கள் பார்வைக்காக அனுமதிக்கப்படுகிறது.
மேலும் செய்திகள்
பாலியல் புகாருக்கு ஆளான சிறப்பு டிஜிபியை பாதுகாத்துக் கொண்டிருக்கும் முதல்வர் பழனிசாமி பெண் இனத்திற்கே சாபக்கேடாகி விட்டார் : மு.க.ஸ்டாலின்
மருத்துவமனைக்கு கூட செல்ல முடியாத நிலை..அதிமுக அலுவலகம் அமைந்துள்ள அவ்வை சண்முகம் சாலை மூடப்பட்டதை எதிர்த்து மனு!!
செல்வராகவன் இயக்கத்தில் வெளிவரவுள்ள நெஞ்சம் மறப்பதில்லை படம் வெளியிட அனுமதி: ஐகோர்ட் உத்தரவு
கட்டிட விபத்தில் பெரும் பாதிப்படைந்த இளைஞரின் உயிரை காப்பாற்றி புதுவாழ்க்கை: அப்போலோ டாக்டர்கள் சாதனை
நடிகை டாப்சி, காஷ்யப் வீடுகளில் ரெய்டு ரூ.650 கோடி வரி ஏய்ப்பு அம்பலம்
பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரம் சிறப்பு டிஜிபி மீதான வழக்கு சிபிஐக்கு மாற்ற வேண்டும்
05-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
100 நாட்களை எட்டிய டெல்லி விவசாயிகள் போராட்டம்.. 200 பேர் பலி.. மத்திய அரசு கோரிக்கைகளுக்கு பணியுமா ?
கலிபோர்னியாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து!: சீட்டுக்கட்டு போல் சரிந்து கிடக்கும் 35 பெட்டிகள்..!!
செவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கு பின்னடைவு!: தரையிறங்கிய சில நொடிகளில் சுக்குநூறாக வெடித்து சிதறியது "ஸ்டார் ஷிப்" ராக்கெட்..!!
தங்கும் அறை, தியேட்டர், பார் என சகல வசதிகளுடன் விண்வெளியில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட ஹோட்டல்..!