கேரளாவில் மீண்டும் பறவை காய்ச்சல் பீதி
2021-01-20@ 18:45:06

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் கருவாற்றா, கருமாடி, தகழி, நெடுமுடி மற்றும் பள்ளிப்பாடு பஞ்சாயத்துகள் மற்றும் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள நீண்டூர் பஞ்சாயத்தின் 14வது வார்டில் கடந்த டிசம்பர் இறுதி வாரத்தில் பறவை காய்ச்சல் பரவியது. இதில் 12 ஆயிரத்திற்கு மேற்பட்ட வாத்துகள் இறந்தன. இதையடுத்து நோய் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்ட பகுதியில் ஒரு கி.மீட்டர் சுற்றளவில் கோழிகள், வாத்துகள், அலங்கார பறவைகள் உட்பட 36 ஆயிரம் பறவைகள் கொல்லப்பட்டு, எரித்து புதைக்கப்பட்டன.
மேலும் கேரள மாநிலத்தில் பறவை காய்ச்சல் தேசிய பேரிடராகவும் அறிவிக்கப்பட்டது. பறவை காய்ச்சலால் கோழி இறைச்சி, முட்டை விலை கடுமையாக சரிந்தது. அரசின் நடவடிக்கையால் பறவை காய்ச்சல் கட்டுப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் ேகரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் கைநகரி பகுதியில் கடந்த சில தினங்களாக ேகாழிகள் திடீரென ெசத்து விழுந்தன. இதையடுத்து கோழிகளின் ரத்த மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் பறவை காய்ச்சலால் கோழிகள் இறந்த விஷயம் தெரியவந்தது.
இதையடுத்து கைநகரியை சுற்றியுள்ள 1 கி.மீ சுற்றளவில் 2,300க்கும் ேமற்பட்ட கோழிகள், வாத்துகள் உட்பட வளர்ப்பு பறவைகளை கொல்ல தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும் மீண்டும் அனைத்து மாவட்டங்களிலும் கண்காணிப்பை அதிகரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. கேரளாவில் மீண்டும் பறவை காய்ச்சல் ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் செய்திகள்
திருக்குறளை படித்து வருகிறேன், அதில் உள்ள ஆழமான கருத்துக்களைக் கண்டு வியக்கிறேன் : ராகுல் காந்தி ட்வீட் !!
உத்தரபிரதேச திருமண விழாவில் விருந்து சாப்பிட்ட 50 பேர் மயக்கம்
பெட்ரோல், டீசல் விலை உயர்விற்கு எதிர்ப்பு: ஆட்டோவை கயிறு கட்டி இழுத்து காங். எம்.பி. சஷி தரூர் நூதன போராட்டம்.!!!
மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவுகள் வெளியீடு
45 வயதுக்கு மேல் உள்ள நபர்களுக்கு தடுப்பூசி போட மருத்துவ சான்றிதழ் கண்டிப்பாக வழங்க வேண்டும்: மத்திய அரசு
ஜனநாயக திருவிழா ஆரம்பம்... தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் அட்டவணை இன்று மாலை வெளியீடு: மக்கள் ஆர்வம்!!
26-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்
புதுச்சேரியில் பிரதமர் மோடி : கருப்பு பலூன்கள் பறக்கவிட்டு மக்கள் எதிர்ப்பு.. #மோடியே திரும்பி போ ஹேஷ்டேக்கால் அலறிய ட்விட்டர்!!
பெட்ரோல், டீசல் விலையேற்றம்; எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறிய மம்தா பானர்ஜி!
3 சிறைகள்...38,000 கைதிகள்!: தொடர் சங்கலியாக வெடித்த கலவரத்தில் 80 கைதிகள் பலி..கதறும் குடும்பத்தினர்..!!
ரோமத்தின் எடை மட்டும் 35 கிலோ... 5 வருடங்களாக தவித்த செம்மறி ஆட்டுக்கு கிடைத்த மறுவாழ்வு..!!