காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்தில் 300க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சபை கூட்டங்கள்: மாவட்டச் செயலாளர் க.சுந்தர் தகவல்
2021-01-20@ 01:01:08

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்தில் 300க்கும் மேற்பட்ட இடங்களில் மக்கள் கிராம சபைக் கூட்டங்கள் நடந்துள்ளன என மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ தெரிவித்தார். காஞ்சிபுரம் திருக்கச்சி நம்பி தெருவில் உள்ள கலைஞர் பவளவிழா மாளிகையில், செய்தியாளர்கள் சந்திப்பு நடந்தது. அப்போது, மாவட்ட செயலாளர் க.சுந்தர், செய்தியாளர்களிடம் கூறியதாவது. கடந்த டிச.20ம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் டிச.23ம் தேதி முதல் ஜன.10ம் தேதிவரை திமுக சார்பில் தமிழகம் முழுவதும் மக்கள் சபை கூட்டங்களை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.
அதன்படி அதிமுக வை நிராகரிப்போம் என்ற முழக்கத்துடன் காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்தில் காஞ்சிபுரம், உத்திரமேரூர், செய்யூர், மதுராந்தகம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட 300க்கும் மேற்பட்ட இடங்களில் மக்கள் கிராம சபை கூட்டங்கள் நடந்தன. இதில், 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். அந்த மக்கள் மனதில் புரட்சி எழுந்துள்ளதை தெரிந்துகொண்டோம். குறிப்பாக தற்போது நடைபெறும் அதிமுக ஆட்சிக்கு எதிரான அலை வீசத் தொடங்கியுள்ளது. திமுகவால் தான் நம்முடைய குறையை தீர்க்க முடியும் என்ற எண்ணம் வேரூன்றி உள்ளது. அதனால்தான் மக்கள் திரண்டு வந்து தங்களது குறைகளை எங்களிடம் தெரிவிக்கிறார்கள். மக்களின் எழுச்சி, 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் மக்கள் பட்ட வேதனைகளுக்கு மாற்றாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைந்தால்தான் நல்லாட்சி கிடைக்கும் என உறுதியாக நம்புவதை அறிந்துகொள்ள முடிந்தது என்றார். அவருடன் எம்பி செல்வம், மாவட்ட அவைத்தலைவர் சேகரன் ஆகியோர் இருந்தனர்.
Tags:
Kanchipuram Southern District over 300 Village People's Council Meetings District Secretary K. Sundar Information காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம் 300க்கும் கிராம மக்கள் சபை கூட்டங்கள் மாவட்டச் செயலாளர் க.சுந்தர் தகவல்மேலும் செய்திகள்
அதிமுக ஆட்சியில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் இன்னல்களை மட்டுமே அனுபவித்தோம்
திருப்போரூர் தொகுதி பாமகவுக்கு: அதிமுகவினர் எதிர்ப்பு
வெள்ளை சட்டைக்கு கிராக்கி
நாங்க சிங்கக் கூட்டம் டிடிவி குள்ளநரிக் கூட்டம்: போட்டு தாக்கும் அமைச்சர் ஜெயக்குமார்
இலை கட்சியில் ஒரு தொகுதிக்கு 3 பேர் சண்டை
உள்ளூர்காரங்களுக்கு சீட் கொடுங்கப்பா... சுவரொட்டி ஒட்டி நூதன கோரிக்கை
04-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
நைஜீரியாவில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட பள்ளி மாணவிகள் 279 பேர் விடுவிப்பு!: புகைப்படங்கள்
ஆராய்ச்சியாளர்களையே மிரள வைத்த டைனோசர் புதைப்படிவம்!: அர்ஜெண்டினாவில் கண்டெடுப்பு..!!
03-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ்!: இன்றும் மத்திய, மாநில அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் போட்டுக்கொண்டனர்..!!!