கன்னியாஸ்திரி அபயா கொலையில் ஆயுள் தண்டனை பெற்ற பாதிரியார் ஐகோர்ட்டில் அப்பீல்
2021-01-19@ 17:38:47

திருவனந்தபுரம்:கேரள கன்னியாஸ்திரி அபயா கொலை வழக்கில் தண்டனை ெபற்ற பாதிரியார் தாமஸ் கோட்டூர் உயர் நீதிமன்றத்தில் அப்பீல் செய்துள்ளார்.கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்தவர் கன்னியாஸ்திரி அபயா. கடந்த 1992ம் ஆண்டு மார்ச் 27ம் தேதி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக விசாரணை நடத்திய 3வது சிபிஐ குழு பாதிரியார்கள் தாமஸ் கோட்டூர், ஜோஸ் புத்ருக்கயில், கன்னியாஸ்திரி செபி ஆகியோரை 2008 நவம்பரில் கைது செய்தது.
இதையடுத்து திருவனந்தபுரம் சிபிஐ நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்து வந்தது. இதற்கிடையே ஜோஸ் புத்ருக்கயில் உயர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார். பாதிரியார் தாமஸ் கோட்டூர் மற்றும் கன்னியாஸ்திரி செபி ஆகியோர் வழக்கை சந்தித்து வந்தனர். இந்த வழக்கில் கடந்த டிசம்பர் 23ம் தேதி தண்டனை வழங்கப்பட்டது. இதில் பாதிரியார் தாமஸ் கோட்டூருக்கு இரட்டை ஆயுள் தண்டனை, கூடுதலாக 8 ஆண்டுகள் சிறையும், கன்னியாஸ்திரி செபிக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டது. 2 பேருக்கும் தலா ₹5 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த கொலை வழக்கில் 28 ஆண்டுகளுக்கு பிறகு தண்டனை வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தண்டனையை எதிர்த்து பாதிரியார் தாமஸ் கோட்டூர் உயர் நீதிமன்றத்தில் அப்பீல் செய்துள்ளார்.
Tags:
கன்னியாஸ்திரிமேலும் செய்திகள்
திருக்குறளை படித்து வருகிறேன், அதில் உள்ள ஆழமான கருத்துக்களைக் கண்டு வியக்கிறேன் : ராகுல் காந்தி ட்வீட் !!
உத்தரபிரதேச திருமண விழாவில் விருந்து சாப்பிட்ட 50 பேர் மயக்கம்
பெட்ரோல், டீசல் விலை உயர்விற்கு எதிர்ப்பு: ஆட்டோவை கயிறு கட்டி இழுத்து காங். எம்.பி. சஷி தரூர் நூதன போராட்டம்.!!!
மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவுகள் வெளியீடு
45 வயதுக்கு மேல் உள்ள நபர்களுக்கு தடுப்பூசி போட மருத்துவ சான்றிதழ் கண்டிப்பாக வழங்க வேண்டும்: மத்திய அரசு
ஜனநாயக திருவிழா ஆரம்பம்... தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் அட்டவணை இன்று மாலை வெளியீடு: மக்கள் ஆர்வம்!!
26-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்
புதுச்சேரியில் பிரதமர் மோடி : கருப்பு பலூன்கள் பறக்கவிட்டு மக்கள் எதிர்ப்பு.. #மோடியே திரும்பி போ ஹேஷ்டேக்கால் அலறிய ட்விட்டர்!!
பெட்ரோல், டீசல் விலையேற்றம்; எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறிய மம்தா பானர்ஜி!
3 சிறைகள்...38,000 கைதிகள்!: தொடர் சங்கலியாக வெடித்த கலவரத்தில் 80 கைதிகள் பலி..கதறும் குடும்பத்தினர்..!!
ரோமத்தின் எடை மட்டும் 35 கிலோ... 5 வருடங்களாக தவித்த செம்மறி ஆட்டுக்கு கிடைத்த மறுவாழ்வு..!!