வாக்களிக்க யாராவது பணம் கொடுத்தால், பணத்தை பெற்றுக்கொள்ளுங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் மம்தா பானர்ஜி பேச்சு.!!!
2021-01-19@ 15:38:31

புருலியா: தமிழகம், அசாம் மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரத்தில், மாநில மற்றும் தேசிய கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக, மேற்கு வங்க மாநிலத்தில் ஆட்சியை தக்க வைக்க மாநில முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். மேற்கு வங்கத்தில் ஆட்சியை பிடிக்க பாஜகவும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
இதற்கிடையே, நேற்று மேற்கு வங்க மாநிலம் நந்திகிராமில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட மாநில முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி, நான் நந்திகிராம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவேன் என அறிவித்துள்ளார். முடிந்தால் நான் பவானிபூர் மற்றும் நந்திகிராம் இரண்டிலிருந்தும் போட்டியிடுவேன் என்று அறிவித்தார். கடந்த ஆண்டு பாஜகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் சுவேந்து ஆதிகாரி, கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் நந்திகிராம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இன்று மேற்கு வங்க மாநிலம் புருலியாவில் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றிய மம்தா பானர்ஜி, எங்கள் கூட்டத்தில் குழப்பத்தை ஏற்படுத்த சிலர் பாஜகவால் அனுப்பப்படுவதை நான் சில நாட்களாக பார்த்து வருகிறேன். எனவே, பாஜக, சிபிஎம் கூட்டங்களைத் தொந்தரவு செய்ய நான் சிலரை அனுப்புவேன் என்றார். ஒரு தலித் குடும்பத்தினர் எங்கள் பாக்கெட்டிலிருந்து அவர்களுக்கு (பாஜக தலைவர்கள் தங்கள் வீட்டிற்கு வருகிறார்கள்) உணவளித்ததாகக் கூறினர்.
அந்தத் தொகையை நாங்கள் எவ்வாறு செலுத்த முடியும்? இதுபோன்ற ஏதாவது ஒன்றை நீங்கள் காணும்போது, அவர்களுக்கு பணம் செலுத்துங்கள் என்று நான் எனது தொழிலாளர்களிடம் கூறுவேன். வாக்களிக்க யாராவது உங்களுக்கு பணம் கொடுத்தால், பணத்தை எடுத்துக் கொள்ளுங்கள் என்றும் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.
மேலும் செய்திகள்
திருக்குறளை படித்து வருகிறேன், அதில் உள்ள ஆழமான கருத்துக்களைக் கண்டு வியக்கிறேன் : ராகுல் காந்தி ட்வீட் !!
உத்தரபிரதேச திருமண விழாவில் விருந்து சாப்பிட்ட 50 பேர் மயக்கம்
பெட்ரோல், டீசல் விலை உயர்விற்கு எதிர்ப்பு: ஆட்டோவை கயிறு கட்டி இழுத்து காங். எம்.பி. சஷி தரூர் நூதன போராட்டம்.!!!
மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவுகள் வெளியீடு
45 வயதுக்கு மேல் உள்ள நபர்களுக்கு தடுப்பூசி போட மருத்துவ சான்றிதழ் கண்டிப்பாக வழங்க வேண்டும்: மத்திய அரசு
ஜனநாயக திருவிழா ஆரம்பம்... தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் அட்டவணை இன்று மாலை வெளியீடு: மக்கள் ஆர்வம்!!
26-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்
புதுச்சேரியில் பிரதமர் மோடி : கருப்பு பலூன்கள் பறக்கவிட்டு மக்கள் எதிர்ப்பு.. #மோடியே திரும்பி போ ஹேஷ்டேக்கால் அலறிய ட்விட்டர்!!
பெட்ரோல், டீசல் விலையேற்றம்; எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறிய மம்தா பானர்ஜி!
3 சிறைகள்...38,000 கைதிகள்!: தொடர் சங்கலியாக வெடித்த கலவரத்தில் 80 கைதிகள் பலி..கதறும் குடும்பத்தினர்..!!
ரோமத்தின் எடை மட்டும் 35 கிலோ... 5 வருடங்களாக தவித்த செம்மறி ஆட்டுக்கு கிடைத்த மறுவாழ்வு..!!