இந்தோனேசியாவில் வெடிக்க தொடங்கிய செமெரு எரிமலை!: பல கிலோ மீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகையை உமிழ்ந்து தள்ளுகிறது..!!
2021-01-18@ 13:05:51

இந்தோனேசியா: இந்தோனேசியாவில் கிழக்கு ஜாவா மாகாணத்தில் உள்ள செமெரு எரிமலை வெடிக்க தொடங்குவதன் அறிகுறியாக சாம்பல் புகையை வெளியிட்டு வருகிறது. இந்தோனேசியாவில், சுனாமி மற்றும் எரிமலை வெடிப்புகள் அடிக்கடி நிகழ்கின்றன. அங்கு எந்த நேரத்திலும் வெடிக்கக்கூடிய வகையில் 130 எரிமலைகள் உள்ளன. இந்த நிலையில் கிழக்கு ஜாவா பகுதியில் உள்ள 3,676 மீட்டர் உயரம் கொண்ட செமெரு எரிமலை வெடிக்க தொடங்கியுள்ளது. தற்போது 5.6 கிலோ மீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகையை எரிமலை வெளியிட்டு வருகிறது. இந்த சாம்பல் துகள்கள் காற்றில் கலந்து வருவதால் மாசு அதிகரித்துள்ளது.
எரிமலை வெடிப்பு தீவிரம் அடைந்து வரும் நிலையில், சுற்றுவட்டார கிராமங்களில் வெப்பம் அதிகரித்துள்ளது. இருப்பினும் அங்கு வசிக்கும் மக்களை அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எதுவும் இதுவரை எடுக்கப்படவில்லை என தெரிகிறது. அண்மை காலமாக அங்குள்ள மெரபி, சினபங்க் ஆகிய இரண்டு எரிமலைகளும் சீற்றத்துடன் காணப்பட்டு வருகின்றன. கடந்த வெள்ளிக்கிழமை இந்தோனேசியாவின் சுலவேசி மாகாணத்தில் ரிக்டர் அளவுகோலில் 6.2 புள்ளிகள் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில் 56 பேர் பலியாகியுள்ளனர். மேலும் படுகாயம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 826 ஆகவும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
கொரோனா தொற்று அதிகரிப்பு: வெளிநாடுகளில் இருந்து இலங்கை வரும் பயணிகளுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க இலங்கை அரசு திட்டம்
இரட்டிப்பு வேகத்தில் பரவும் கொரோனா வைரஸ்: உலகம் முழுவதும் பாதிப்பு எண்ணிக்கை 14 கோடியை தாண்டியது..! 30.23 லட்சம் பேர் உயிரிழப்பு
நாடு முழுவதும் ஒரு நிமிட மவுன அஞ்சலி இங்கிலாந்து இளவரசர் பிலிப் உடல் அடக்கம்: பிரியாவிடை கொடுத்தார் ராணி
விண்ணில் 6 மாத ஆய்வுக்கு பிறகு விண்வெளி வீரர்கள் பூமிக்கு திரும்பினர்
அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களில் 4 பேர் சீக்கியர்கள்: 3 பேர் வயதான பெண்கள்
மின்னல் வேகத்தில் பரவுது கொரோனா..! மக்கள் இருங்க கவனமா..! உலக அளவில் பாதிப்பு எண்ணிக்கை 14.05 கோடியை தாண்டியது: 30.01 லட்சம் பேர் உயிரிழப்பு
18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!
தீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு!: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..!!
22-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்
15-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்