ஆந்திராவில் மதம் மாற்றத்தில் ஈடுபட்டு கோயில்களை திட்டமிட்டு சேதப்படுத்திய பாதிரியார்: போலீசில் பரபரப்பு வாக்குமூலம்
2021-01-18@ 01:09:05

திருமலை: ஆந்திராவில் கோயில்களை திட்டமிட்டு சேதப்படுத்திய பாதிரியாரை போலீசார் கைது செய்தனர்.ஆந்திராவில் முதல்வர் ஜெகன் மோகன் ஆட்சிக்கு வந்த கடந்த ஒன்றரை ஆண்டில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள இந்து கோயில்களில் இருக்கும் சிலைகள், கோபுரங்கள் சேதப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் உச்சகட்டமாக விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள ராமதீர்த்தம் கோதண்டராமர் சிலையின் தலை உடைக்கப்பட்டு வேறொரு இடத்தில் வீசப்பட்டது. இது குறித்து சிஐடி விசாரணை நடத்த ஜெகன் உத்தரவிட்டார். அவர்களது செய்தனர். இந்நிலையில், கிழக்கு கோதாவரி மாவட்டம், காக்கிநாடாவை சேர்ந்த பாதிரியார் சக்ரவர்த்தி என்கிற பிரவீன் சக்ரவர்த்தியை காக்கிநாடா போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
பெங்களூருவை மையமாக கொண்டு செயல்படும் ‘காசிப்’ எனும் யூடியூப் சேனலில் சக்ரவர்த்தி சில நாட்களாக தொடர்ந்து பேசி வந்தார். அந்த வீடியோக்கள் தற்போது வைரல் ஆகி வருகிறது. ‘சைலோம் பார்வையற்றோர் மையம்’ என்ற பெயரில் கிறிஸ்தவ அமைப்பை நடத்தி வரும் அவர், தன் மூலம் வெளிநாடுகளிலிருந்து நிதி பெற்று மதமாற்ற செயல்களில் ஈடுபட்டார். இவர் தானும் தனது சக மத போதகர்களும் ஆந்திராவில் பிற மதத்தினரை கிறிஸ்தவ மதத்துக்கு மாற்றி வருவதாகவும், அவ்வாறு ஒரு கிராமத்தில் உள்ள அனைவரையுமே மாற்றி விட்டால் அதற்கு ‘கிறிஸ்து கிராமம்’ என்று பெயரிடுவதாகவும் தெரிவித்தார்.
மேலும், அங்குள்ள மக்களை மதம் மாற்றிய பிறகு அங்கு குடியிருப்பில் உள்ள கோயில்கள் மற்றும் சிலைகளை காலால் எட்டி உதைத்து அவர்களையும் உதைக்க சொல்வதாகவும் பெருமையாக பேசி இருந்தார். இந்த வருடம் வெளிநாட்டு நன்கொடையாளரிடம் பிரவீன் பேசும் வீடியோ வெளியானது. அதில், தன்னுடன் 3,642 மத போதகர்கள் மதமாற்றத்தில் ஈடுபடுவதாகவும், இதுவரை 699 ‘கிறிஸ்து கிராமங்களை’ ஏற்படுத்தி உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இது குறித்து சிங்கம் லட்சுமி நாராயணா என்பவர் அளித்த புகாரின் பேரில், சிஐடி போலீசார் பிரவீனை கைது செய்தனர். கோயில்களை சேதப்படுத்தியதில் பாதிரியார்களுக்கு உள்ள தொடர்புகள், மதமாற்றம் செய்யப்பட்ட கிராமங்கள் குறித்து போலீசிடம் அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
Tags:
Andhra conversion temple priest confession to police ஆந்திரா மதம் மாற்றம் கோயில் பாதிரியார் போலீசில் வாக்குமூலம்மேலும் செய்திகள்
தேர்தல் விதிமுறை மீறல் என்பதால் தடுப்பூசி சான்றிதழில் இருந்து மோடி படத்தை நீக்க வேண்டும்: தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு
பெற்றோரை பிரிய மனமின்றி அழுத மணப்பெண் பலி
கன்னியாகுமரி எம்பி தொகுதியில் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டி
தமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் ரத்தாகுமா?
டாலர் கடத்தல் பற்றி விசாரணை கேரள சபாநாயகருக்கு சுங்க இலாகா நோட்டீஸ்
யாரிடம் கேட்டு கேரள எல்லை மூடப்பட்டது?: ஐகோர்ட் கேள்வி
06-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
துருக்கியில் ராணுவ ஹெலிகாப்டர் தரையிறங்க முயன்ற போது கீழே விழுந்து வெடித்து சிதறியதில் 11 பேர் பலி..!!
05-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
100 நாட்களை எட்டிய டெல்லி விவசாயிகள் போராட்டம்.. 200 பேர் பலி.. மத்திய அரசு கோரிக்கைகளுக்கு பணியுமா ?
கலிபோர்னியாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து!: சீட்டுக்கட்டு போல் சரிந்து கிடக்கும் 35 பெட்டிகள்..!!