பொங்கல் விடுமுறையால் படகு குழாமில் குவிந்த சுற்றுலாப்பயணிகள்
2021-01-18@ 00:15:26

செய்யூர்: ஆண்டுதோறும் காணும் பொங்கலையொட்டி, அனைத்து சுற்றுலா தலங்கள் மற்றும் கடற்கரை பகுதிகளில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படும். ஆனால், இந்த ஆண்டு கொரோனா பரவலை தடுக்கும் வகையில் கடற்கரையோரமுள்ள பெரும்பாலான சுற்றுலா தலங்கள் மூடப்பட்டன. இந்நிலையில், செய்யூர் அடுத்த முதலியார்குப்பம் பகுதியில் உள்ள தமிழக அரசின், தமிழ்நாடு சுற்றுலா படகு குழாமில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் சுற்றுலா பயணிகளுக்காக திறக்கப்பட்டது.
இதனால், காணும் பொங்கல் பண்டிகையை ஒட்டி, இந்த சுற்றுலா தலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை எப்போதும் இல்லாத வகையில் அதிகரித்து காணப்பட்டது. தொடர்ந்து நேற்று ஞாயிறு விடுமுறை காரணமாக இங்கு அதிகளவு சுற்றுலா பயணிகள் வருகையால் களைகட்டியது. இங்கு வந்த அனைத்து சுற்றுலா பயணிகளுக்கு படகு குழாம் நிர்வாகத்தின் சார்பில், கிருமிநாசினிகள் வழங்கப்பட்டதோடு, சுற்றுலா பயணிகளை சமூக இடைவெளியை பின்பற்ற செய்து, பாதுகாப்பான முறையில் ஸ்பீடு போட்டு, வாட்டர் ஸ்கூட்டர், எட்டு பேர் பயணிக்கக்கூடிய படகு மற்றும் மிதி படகுகளில் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியாக படகு சவாரி செய்தனர்.
மேலும் செய்திகள்
வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் சப்ளையில் ஏற்பட்ட சிக்கலால்தான் 7 நோயாளி இறப்பு: திடுக்கிடும் தகவல்கள்
கொரோனா பரவலை கட்டுப்படுத்த 23ல் அமல்..! புதுச்சேரியில் சனி, ஞாயிறு முழு ஊரடங்கு
திருமணம் ஆகாமலேயே ஆசிரியை கர்ப்பம்: வீட்டில் பிரசவம் பார்த்ததில் தாய், குழந்தை உயிரிழப்பு: குழந்தை சடலம் கிணற்றில் வீச்சு
சீரான மும்முனை மின்சாரம் வழங்காததால் 70,000 ஏக்கர் நெற்பயிர்கள் நீரின்றி கருகும் அவலம்: அரக்கோணம், நெமிலியில் விவசாயிகள் வேதனை
நாகை மாவட்டத்தில் பதிவான வாக்கு இயந்திரம் உள்ள கட்டிடம் மீது பறந்த ட்ரோன்: சென்னையை சேர்ந்த 3 பேர் சிக்கினர்
வாக்கு எண்ணிக்கை மையத்தில் 96 மர்ம காலி டிரங்க் பெட்டிகள்: தேனியில் பரபரப்பு
இன்றைய சிறப்பு படங்கள்
செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக பறந்த ஹெலிகாப்டர்!: புதிய வரலாற்று சாதனை படைத்து அசத்திய நாசா விஞ்ஞானிகள்..!!
ஹங்கேரியில் களை கட்டுகிறது தடுப்பூசி கேக் விற்பனை!: ஃபைசர், மாடர்னா, ஆஸ்ட்ரா ஜெனிகா கேக் வகைகளுக்கு மவுசு அதிகம்..!!
எகிப்தில் பயணிகள் ரயில் தடம் புரண்டு கோர விபத்து!: 11 பேர் உடல் நசுங்கி பலி.. 98 பேர் படுகாயம்..!!
கொரோனா அச்சம் காரணமாக டெல்லியில் ஒரு வாரம் லாக்டவுன் : பல்லாயிரக்கணக்கில் வெளியேறிய வெளிமாநில தொழிலாளர்கள்