நீதித்துறையை கொச்சைப்படுத்தியதாக ஆடிட்டர் குருமூர்த்தி மீது வக்கீல்கள் போலீசில் புகார்
2021-01-17@ 15:09:02

நெல்லை: நீதித்துறை மாண்பை கொச்சைப்படுத்தி பேசிய ஆடிட்டர் குருமூர்த்தி மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சேரன்மகாதேவி வக்கீல்கள் போலீசில் புகார் கொடுத்துள்ளனர்.
சென்னையில் நடந்த ஒரு வார பத்திரிகை ஆண்டு விழாவில் பேசிய அதன் ஆசிரியர் பொறுப்பில் இருக்கும் ஆடிட்டர் குருமூர்த்தி, நீதிபதிகள் குறித்து சர்க்கைகுரிய வகையில் பேசியிருந்தார். இது இந்திய
நீதித்துறைக்கே களங்கம் விளைவிக்கும், கண்டனத்திற்குரிய பேச்சு என்று தமிழகம் முழுவதும் வக்கீல்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில், நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி வழக்கறிஞர்கள் சங்கத்தின் மூத்த வக்கீல் ராஜகோபால் தலைமையில் வக்கீல்கள் நேற்று சேரன்மகாதேவி போலீசில் ஒரு புகார் மனுவை அளித்துள்ளனர். அதில், ‘‘நீதித்துறையின் மாண்பை கொச்சைப்படுத்தி பேசிய ஆடிட்டர் குருமூர்த்தி மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும்’’ என்று குறிப்பிட்டுள்ளனர்.போலீசார் புகாரை பதிவு செய்து வக்கீல்களுக்கு ரசீது கொடுத்துள்ளனர்.
Tags:
Auditor Kurumurthyமேலும் செய்திகள்
கோடை வெயில் சுட்டெரிப்பதால் காவேரிப்பாக்கம் ஏரி நீர்மட்டம் குறைந்தது-பாசனம் பாதிப்பதாக விவசாயிகள் கவலை
காவேரிப்பாக்கம் பகுதிகளில் சொர்ணவாரி பருவத்தில் விவசாய பணிகள் மும்முரம்
அதிகரிக்கும் கொரோனாவால் அச்சம் பூலாம்பட்டிக்கு சுற்றுலா பயணிகள் வருகை சரிவு-விசைப்படகுகள் வெறிச்சோடின
அரசு இருக்கு... ஆனா இல்லை...மிரட்டும் கொரோனா.. திணறும் அதிகாரிகள்
கொரோனா பாதிப்பு எதிரொலி போச்சம்பள்ளி சந்தையில் புளி விற்பனை மந்தம்
குடியாத்தம் நகராட்சியில் பாதுகாப்பு கவசங்கள் இன்றி பணியில் ஈடுபடும் தூய்மை பணியாளர்கள்-மாவட்ட நிர்வாகம் நடவடிக்கைக்கு கோரிக்கை
ஸ்பெயினில் வகுப்பறையாக மாறிய கடற்கரை!: தனிமனித இடைவெளியுடன் ஆர்வமுடன் கல்வி கற்கும் மாணவர்கள்..!!
19-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!
தீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு!: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..!!