கஞ்சா கடத்தியவர் கைது
2021-01-16@ 00:06:44

பூந்தமல்லி; கஞ்சா கடத்திவந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். சென்னை வளசரவாக்கம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் கல்லூரி மாணவர்கள் மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு இரவு நேரங்களில் கஞ்சா சப்ளை செய்வதாக வளசரவாக்கம் போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்படி இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகப்படும்படி வந்த லோடு ஆட்டோவை மடக்கி சோதனை நடத்தினர். அதில் இருந்தவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தார். விசாரணையில் மதுரவாயலை சேர்ந்தவர் முருகன் (24) என்பதும் மொத்தமாக கஞ்சா வாங்கி வந்து விற்பனை செய்ததும், பைக்கில் கஞ்சா எடுத்து வந்தால் போலீசாரிடம் சிக்கிக் கொள்வோம் என்பதால் உறவினரின் லோடு ஆட்டோவில் கஞ்சாவை கடத்தி வந்ததும் தெரியவந்தது. அவரிடமிருந்து 2 கிலோ கஞ்சா மற்றும் லோடு ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
அம்பத்தூர் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட இன்ஜினியர் உள்பட 2 பேர் கைது : 40 சவரன் பறிமுதல்
அம்பத்தூர் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட இன்ஜினியர் உள்பட 2 பேர் கைது: 40 சவரன் பறிமுதல்
2வது கணவரை கொன்று வீட்டில் புதைப்பு கள்ளக்காதலனுடன் மனைவி அதிரடி கைது
பெண் போலீசுக்கு பாலியல் தொல்லை தஞ்சை போலீஸ்காரர் சஸ்பெண்ட்
சிறுமிக்கு பாலியல் தொல்லை வாலிபருக்கு 20 ஆண்டு சிறை
தஞ்சை அருகே மணல் கடத்தல் தகராறில் பாஜ பெண் நிர்வாகி வீடு சூறை: அதிமுக பிரமுகர் உள்பட 12 பேர் கைது
18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!
தீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு!: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..!!
22-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்
15-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்