சபரிமலையில் இன்று மகரஜோதி தரிசனம்
2021-01-14@ 00:34:07

திருவனந்தபுரம்: சபரிமலையில் இன்று மகரவிளக்கு சிறப்பு பூஜை மற்றும் மகரஜோதி தரிசனம் நடக்கிறது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் தற்போது மகரவிளக்கு கால பூஜைகள் நடந்து வருகின்றன. இன்று (14ம் தேதி) பிரசித்திபெற்ற மகரவிளக்கு பூஜை, மகரஜோதி தரிசனமும் நடக்கிறது. பந்தளத்தில் இருந்து பவனியாக புறப்பட்ட திருவாபரண பெட்டி இன்று மாலை 5.30க்கு சரங்குத்தி வந்தடையும். பின்னர் சன்னிதானம் கொண்டுவரப்படும் திருவாபரண பெட்டியை தந்திரி கண்டரர் ராஜீவரர் மற்றும் மேல்சாந்தி பெற்று ஐயப்பனுக்கு அணிவித்து தீபாராதனை நடத்துவர். இதையடுத்து பொன்னம்பல மேட்டில் மகரஜோதி தெரியும். தொடர்ந்து கற்பூர ஆராதனை நடைபெறும். பக்தர்கள் வரும் 19ம் தேதி வரை தரிசனம் செய்யலாம்.
மேலும் செய்திகள்
கர்நாடகாவில் எடியூரப்பா தலைமையில் அமைச்சரவை பலமாக உள்ளது: அமைச்சர் பி.ஸ்ரீராமுலு பெருமை
விவசாயிகளின் போராட்டம் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்: குமாரசாமி ஆலோசனை
அரசு நிலம் டிநோடிபிகேஷன் செய்த புகாரில் எடியூரப்பா, நிராணியை கைது செய்ய உச்சநீதிமன்றம் இடைக்கால தடை
இரு கார்கள் மோதிய விபத்தில் இருவர் பலி
மாநகராட்சி மேயர் தேர்தல் இட ஒதுக்கீடு அறிவிக்கும் வரை முடிவு எடுக்கமாட்டோம்: எம்எல்ஏ சாரா மகேஷ் தகவல்
சென்னை-மைசூரு இடையே நாளை முதல் சிறப்பு ரயில்: தென்னக ரயில்வே அறிவிப்பு
28-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்
27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!