தாய்லாந்து ஓபன் பேட்மின்டன்: 2வது சுற்றில் கிடாம்பி
2021-01-14@ 00:33:22

பாங்காக்: தாய்லாந்து ஓபன் பேட்மின்டன் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் விளையாட, இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் தகுதி பெற்றார். முதல் சுற்றில் சக வீரர் சவுரவ் வர்மாவுடன் நேற்று மோதிய கிடாம்பி 21-12, 21-11 என்ற நேர் செட்களில் எளிதாக வென்றார். இப்போட்டி 31 நிமிடத்திலேயே முடிவுக்கு வந்தது. பாங்காக்கில் கொரோனா பரிசோதனைக்காக மூக்கில் இருந்து சளி மாதிரி சேகரித்தபோது, அலட்சியமாக செயல்பட்ட சுகாதாரப் பணியாளரால் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியதாக கிடாம்பி குற்றம் சாட்டியிருந்தார். ரத்தம் சொட்டும் அந்த படங்களையும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்த நிலையில், முதல் சுற்றில் அவர் இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினார். ஆண்கள் இரட்டையர் பிரிவில் களமிறங்கிய இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி - சிராக் ஷெட்டி இணை 19-21, 21-16, 21-14 என்ற செட் கணக்கில் தென் கொரியாவின் கிம் ஜி ஜங் - லீ யோங் டே ஜோடியை போராடி வென்று 2வது சுற்றுக்கு முன்னேறியது.
மேலும் செய்திகள்
சில்லி பாயின்ட்....
ராயல் சேலஞ்சர்சுடன் இன்று சன்ரைசர்ஸ் பலப்பரீட்சை
பேட்டிங்கில் சொதப்பியது கேகேஆர்..! மும்பைக்கு முதல் வெற்றி
கொல்கத்தாவுடன் இன்று மோதல் வெற்றிக்கணக்கை துவங்குமா மும்பை?
கடைசி ஓவரில் பஞ்சாப் கிங்ஸ் த்ரில் வெற்றி: தோல்வி அடைந்தாலும் எங்கள் வீரர்கள் அருமையாக ஆடினார்கள்...சதம் அடித்த ராஜஸ்தான் கேப்டன் சஞ்சுசாம்சன் நெகிழ்ச்சி
351 சிக்சர்கள்... கெய்ல் சாதனை!
சிங்கப்பூரில் புது முயற்சி!: நீங்க ஆர்டர் செய்தால் போதும் மளிகை பொருட்களை வீட்டிற்கு டோர் டெலிவரி செய்யும் ரோபோ அறிமுகம்..!!
பிரிட்டன் அரசின் ஒரு மாத கால ஊரடங்கிற்கு கை மேல் பலன்!: குறையும் கொரோனா தொற்று..கடைகள், ஷாப்பிங் மால்கள் திறப்பு...மக்கள் உற்சாகம்..!!
சவூதி அரேபியாவில் ரமலான் நோன்பு தொடக்கம் : முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் இஸ்லாமியர்கள் வழிபாடு!!
இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் வகையில் காஷ்மீரின் செனாப் நதி குறுக்கே உலகின் மிக உயரமான ரயில்வே பாலம்!!
13-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்