பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான அருளானந்தத்திடம் பல ரகசியங்கள் இருக்கிறது: போலீஸ் காவலில் ஹெரன்பால் கதறல்
2021-01-13@ 21:17:33

கோவை: கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வழக்கில் ஏற்கனவே திருநாவுக்கரசு, சபரிராஜன் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது பொள்ளாச்சி நகர அதிமுக மாணவரணி செயலாளர் அருளானந்தம் (34), முன்னாள் அதிமுக பொள்ளாச்சி நகர இணை செயலாளர் ஹெரன் பால் (28), அதிமுக உறுப்பினர் பாபு (29) ஆகியோர் சி.பி.ஐ. போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.இதில் ஹெரன் பாலை சிபிஐ போலீசார் நேற்று முன்தினம் காவலில் எடுத்தனர். இவரிடம் விடிய விடிய விசாரணை நடந்தது. நேற்று 2வது நாளாக விசாரணை நடத்தப்பட்டது. பேச மறுத்து சில மணி நேரம் அடம் பிடித்த ஹெரன் பால் பிறகு பல்வேறு தகவல்களை தெரிவித்தார். போலீஸ் தரப்பில் பாலியல் விவகாரத்தில் அரசியல் கட்சியை சேர்ந்த சிலரின் தொடர்பு குறித்து கேட்டனர்.
அப்போது ஹெரன் பால், ‘‘எனக்கு அரசியல் ரீதியான ெதாடர்பு பெரிய அளவில் இல்லை. என் நண்பர்களுடன் சேர்ந்து பல்வேறு இடங்களுக்கு போவேன். அவர்கள்தான் எனக்கு பெண்களை அறிமுகம் செய்து வைத்தார்கள். நானாக எந்த பெண்ணையும் அழைத்து செல்லவில்லை. நண்பர்கள் அழைத்து வந்த பெண்களுடன் ஜாலியாக இருந்தேன்’’ எனக் கூறியாக தகவல் வெளியாகியுள்ளது. அருளானந்தம் செல்போனில் அரசியல் பிரமுகர்களை தொடர்பு கொண்டு பொள்ளாச்சிக்கு வர சொல்லுவார். எப்ப வேணாலும் வாங்க, எல்லா ஏற்பாடும் செய்து தருகிறேன் என அன்பாக அழைப்பார்.
அவரது அழைப்பின் பேரில் சிலர் பொள்ளாச்சி வந்திருக்கிறார்கள். குறுகிய காலத்தில் அவர் பொள்ளாச்சியில் பிரபலமான நபராக மாறி விட்டார். அவரிடம் பல ரகசியங்கள் இருக்கிறது. அவரை நன்றாக விசாரித்தால் மேலும் சிலர் சிக்குவார்கள். ஹெரன் பால் கூறிய சில தகவல்களை போலீசார் வீடியோ ஆதாரமாக பதிவு செய்தனர். விடிய விடிய தூங்க விடாமல் விசாரித்ததால் ஹெரன் பால் தனக்கு தெரிந்த தகவல்களை தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது.
மேலும் செய்திகள்
டெல்லியில் விவசாயிகள் தாக்குதலை கண்டித்து இந்திய மாணவர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்
தைப்பூசத்தை முன்னிட்டு மாங்காடு காமாட்சி அம்மன் கோயில் தெப்பத்திருவிழா
காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி பொது பேரவை கூட்டம்
தேசிய வாக்காளர் தின போட்டியில் அரசினர் சிற்ப கல்லூரி மாணவர் முதலிடம்
மதுராந்தகம் ஒன்றியம் அரியனூர் ஊராட்சியில் நிறைவடையாமலே விளையாட்டு மைதான பணி முடிந்ததாக கல்வெட்டு: அதிகாரிகள் அலட்சியம் என குற்றச்சாட்டு
பெண்கள் பயணிக்க கூடுதல் பெட்டி அமைக்க காஞ்சிபுரம் எம்எல்ஏ கோரிக்கை மனு
28-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்
27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!