மாநகராட்சி பூங்காவை மக்கள் பராமரிக்கலாம்
2021-01-11@ 00:27:16

சென்னை: சென்னையில் உள்ள பூங்காக்களை தத்தெடுக்கும் திட்டத்தை சென்னை மாநகராட்சி துணை ஆணையர் மேகநாத ரெட்டி அறிவித்துள்ளார். இதன்படி பசுமை சென்னை திட்டத்தின் கீழ் மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள பூங்காக்கள் ஆகியவற்றை தத்தெடுக்கலாம். பொதுமக்கள், குடியிருப்பு நலச்சங்கங்கள், தனியார் நிறுவனங்கள், பெரு நிறுவனங்கள் ஆகியோர் பூங்காக்களை தத்தெடுத்து பராமரிக்கலாம். தத்தெடுக்க முன்வருபவர்கள் அவர்களின் பெயர் பலகைகளை வைத்துக்கொள்ள அனுமதி வழங்கப்படும். இதற்கு முன்பாக வசூலிக்கப்பட்டு வந்த கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன்படி ஒரு சதுர மீட்டருக்கான தொகை ரூ.100 மற்றும் பிணை வைப்புத் தொகை ரூ.50 ஆயிரமும் ரத்து செய்யப்பட்டுள்ளதால், பொதுமக்கள் பூங்காவை தத்தெடுக்க முன்வர வேண்டும் என்றும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகள்
டாஸ்மாக் கடை உடன் இணைந்து செயல்படும் பார்கள் மூடல்: நாளை முதல் மீண்டும் டோக்கன் முறையில் மதுவிற்பனை...தமிழக அரசு அறிவிப்பு.!!!!
தினசரி பாதிப்பு 11,000-ஐ நெருங்கியது: தமிழகத்தில் கொரோனாவால் ஒரே நாளில் 44 பேர் பலி; 75,116 பேருக்கு சிகிச்சை...சுகாதாரத்துறை அறிக்கை.!!!
கொரோனா தடுப்பூசி தயாரிக்க செங்கல்பட்டு இந்துஸ்தான் பயோடெக் நிறுவனத்தை அனுமதிக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்.!!!!
கொரோனா தடுப்பூசி செலுத்தும் மையங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அளியுங்கள் : தமிழக அரசுக்கு உத்தரவு!!
மதுப்பிரியர்கள் 6 அடி சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்: புதிய கட்டுப்பாடுகளை வெளியிட்டது டாஸ்மாக் நிர்வாகம்.!!!!
தமிழகம் முழுவதும் ஆக்கிரமிப்புகளால் கால்வாய்கள் சுருங்கிவிட்டதாக உயர்நீதிமன்றம் வேதனை
ஸ்பெயினில் வகுப்பறையாக மாறிய கடற்கரை!: தனிமனித இடைவெளியுடன் ஆர்வமுடன் கல்வி கற்கும் மாணவர்கள்..!!
19-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!
தீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு!: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..!!