யானைகளுக்கு கஷ்ட காலம்!
2021-01-07@ 16:56:03

குறிப்பாக ஓகாவாங்கா என்ற டெல்டா பகுதியில் மட்டும் கடந்த இரு மாதங்களில் 350க்கும் மேற்பட்ட யானைகள் இறந்திருக்கிறதாம். இறக்கும் யானைகளை ஆய்வு செய்யும் வனத்துறையினர், மரணத்தின் காரணம் புரியாமல் திகைத்து நிற்கிறார்கள்.இவை வேட்டைக்காரர்களால் கொல்லப்படவில்லை என்பது யானைகளை நோக்கும்போது தெளிவாகவே புரிகிறது. இறந்த யானைகளின் தந்தம் வெட்டப்படவில்லை. யானையின் உடலில் சயனைடு போன்ற விஷங்கள் எதுவுமில்லை. வெடிவைத்து உடல் பாகம் சிதைக்கப்படுவதில்லை. மேலும், வயது பாலின பாகுபாடின்றி பலதரப்பட்ட யானைகளும் இறக்கின்றன என்பதால் இது வேறு என்னவோ பிரச்சனை என்று கருதுகிறார்கள்.
இறந்து கிடக்கும் யானைகளில் சில தடுமாறி விழுந்தது போன்று தோற்றமளிக்கின்றன. ஒரு யானை சுற்றியபடியே நடந்து தள்ளாடி விழுந்து இறந்திருக்கிறது. இதனால் ஏதேனும் மூளை அல்லது நரம்பு மண்டலம் தொடர்பான நோய்த்தொற்று ஏதும் பரவிக்கொண்டிருக்குமோ என்று அஞ்சுகிறார்கள். உயிரோடு இருக்கும் யானைகளிலும் பல உடல் மெலிந்தும், சோர்வாகவும் காணப்படுகின்றனவாம். நடக்கவே இயலாமல் தள்ளாடித் திரிகின்றன என்கிறார்கள். மாதிரிகளைச் சேகரித்துப் பரிசோதனைக்கு அனுப்பியிருக்கிறார்கள். முடிவு வந்தால்தான் என்னாச்சு என்று தெரியும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
Tags:
யானைகள்மேலும் செய்திகள்
பெரியோர்களே... தாய்மார்களே... தமிழகத்தில் ஒரு ஸ்மார்ட் சிட்டியையாவது காட்டவும்: குப்பை எடுக்கும் திட்டங்களுக்கு பல கோடி ஒதுக்கீடு; நிதியை வேறு பணிக்கு மாற்றி கோடிக்கணக்கில் கமிஷன்; சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு
ஊக்லாவால் (Ookla) இந்தியாவின் அதிவேக 4G நெட்வொர்க்காக வி(Vi) (வோடாஃபோன் ஐடியா) அறிவிக்கப்பட்டுள்ளது.
சரிகமபதநி-ன்னா என்ன?
அரிசி எங்கிருந்து வந்தது?
டெலிபோன் டைரக்டரியின் கதை!
ரூ.1000-க்கு விற்கும் சிறப்பு டீ
05-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
100 நாட்களை எட்டிய டெல்லி விவசாயிகள் போராட்டம்.. 200 பேர் பலி.. மத்திய அரசு கோரிக்கைகளுக்கு பணியுமா ?
கலிபோர்னியாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து!: சீட்டுக்கட்டு போல் சரிந்து கிடக்கும் 35 பெட்டிகள்..!!
செவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கு பின்னடைவு!: தரையிறங்கிய சில நொடிகளில் சுக்குநூறாக வெடித்து சிதறியது "ஸ்டார் ஷிப்" ராக்கெட்..!!
தங்கும் அறை, தியேட்டர், பார் என சகல வசதிகளுடன் விண்வெளியில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட ஹோட்டல்..!