திரையரங்கில் 100 சதவீதம் இருக்கைக்கு அனுமதி அளிக்க மருத்துவ நிபுணர் குழு பரிந்துரை செய்யவில்லை: பொது சுகாதாரத்துறை நிபுணர் பேட்டி
2021-01-07@ 01:25:28

சென்னை: தமிழகத்தில் உள்ள, திரையரங்குகளில், 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதியளிக்க பரிந்துரைக்கவில்லை என்று பொது சுகாதாரத்துறை நிபுணர் குகானந்தம் தெரிவித்தார். தமிழகத்தில் கொரோனா தொற்று தற்போது தினசரி ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. இந்நிலையில், இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. தமிழகத்தில் தற்போது வரை 4 பேருக்கு உருமாறிய கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவருக்கும் தனி பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தியேட்டர்களில் 100 சதவீதம் பார்வையாளர்களுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. பொங்கலுக்கு ஒரு சில படங்கள் வெளியாவதை தொடர்ந்து தமிழக அரசு இந்த முடிவு எடுத்துள்ளது. இது தொடர்பான அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக தமிழக மருத்துவ நிபுணர் குழுவில் உள்ள பொது சுகாதாத்துறை நிபுணர் குகானந்தம் அளித்த பேட்டி : திரையரங்குகளின் வடிவமைப்பின்படி, வெளி காற்று உள்ளே வராதப்படியும், உள்காற்று வெளியே செல்லாதப்படியும் இருக்கும்.
தனிமனித இடைவெளியின்றி, அனைவரும் ஒன்றாக அமரும்போது, ஒருவருக்கு அறிகுறியற்ற முதல்நிலை தொற்று இருந்தாலும், மற்றவர்களுக்கு எளிதில் பரவும். எனவே, 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே நாங்கள் பரிந்துரை அளித்தோம். 100 சதவீத இருக்கைகளுக்கு பரிந்துரைக்கவில்லை.
பல மாதங்களுக்கு பின் திரையரங்குகள் திறக்கப்பட உள்ளது. பூஞ்சை களான்கள் வளர்ந்திருக்க கூடும். அவற்றை, சுத்தம் செய்ய வேண்டும். ‘ஏசி’ குழாய்களையும் சுத்தம் செய்ய வேண்டும். திரையரங்கில் காற்று உள்ளே வருவதையும் உறுதிப்படுத்த வேண்டும். அனைத்து பகுதிகளையும், அடிக்கடி கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். 50 சதவீத இருக்கைகளுடன் திரையரங்கம் செயல்பட்டப்போது, மக்கள் எப்படி ஆர்வம் செலுத்தவில்லையே, அதேபோன்று தற்போதும் திரையரங்கம் செல்வதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.
மேலும் செய்திகள்
புரசைவாக்கத்தில் இயங்கி வரும் பிரபல துணிக்கடை ஊழியர்கள் 26 பேருக்கு கொரோனா தொற்று: கடைக்கு சீல்
தாய் குறித்து தவறாக பேசியதால் ஆத்திரம்: ஆட்டோவில் தூங்கிய பெயின்டர் சுத்தியலால் அடித்து படுகொலை: போதை நண்பர்கள் கைது
வாக்கு இயந்திரங்கள் வைத்துள்ள இடத்தில் லேப்டாப்புடன் மர்ம நபர்கள்: திருப்போரூர் அருகே பரபரப்பு
தமிழக அரசு விதித்துள்ள அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளையும் முறையாக பின்பற்ற வேண்டும்: மக்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
தலைவர்கள் பெயரில் இருந்த சாலைகளின் பெயர் மாற்றம்: யார் பார்த்த வேலை இது...?: இதுவரை விடை கிடைக்காத புதிர்: வாய் திறக்காத அதிகாரிகள்
தமிழகத்தில் நடப்பாண்டில் 9,018 மின்வாகனம் விற்பனை
ஸ்பெயினில் வகுப்பறையாக மாறிய கடற்கரை!: தனிமனித இடைவெளியுடன் ஆர்வமுடன் கல்வி கற்கும் மாணவர்கள்..!!
19-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!
தீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு!: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..!!