மருத்துவ படிப்பில் 7.5% உள்ஒதுக்கீடுக்கு தடை கோரிய வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது: சென்னை உயர்நீதிமன்றம்
2021-01-05@ 13:58:27

சென்னை: மருத்துவ படிப்பில் 7.5% உள்ஒதுக்கீடுக்கு தடை கோரிய வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசு பள்ளி மாணவர்களைப் போன்று அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் இடஓதுக்கீடு கோரி கத்தோலிக்க கல்வி சங்கம் வழக்கு தொடர்ந்தது. கலந்தாய்வு நடக்கும் நிலையில் மாணவர்கள் நலன் கருதி இடைக்கால உத்தரவு மூலம் இடையூறு ஏற்படுத்த முடியாது என உயர்நீதிமன்றம் கூறியது. தனியார் பள்ளி மாணவர்கள், தமிழ்நாடு கத்தோலிக்க கல்வி சங்க வழக்கு 3 வாரத்துக்கு ஒத்திவைத்து தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு திட்டவட்டமாக கூறியுள்ளது.
7.5% உள்ஒதுக்கீடுக்கு இடைக்கால தடையில்லை மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு கொண்டு வந்த சட்டத்துக்கு இடைக்காலத் தடை விதிக்க உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. எனவே தமிழக அரசு கொண்டு வந்துள்ள 7.5% உள்ஒதுக்கீட்டு சட்டத்துக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாது என கடந்த மாதம் 16-ம் தேதி நிதிபதிகள் தெரிவித்தனர். அரசுப் பள்ளிகளின் தரம் குறைவாக இருப்பதால் தான் மாணவர்களுக்கு இதுபோன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. மேலும் அரசுப் பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கூறியிருந்தது.
மேலும் செய்திகள்
தமிழகம் முழுவதும் ஆக்கிரமிப்புகளால் கால்வாய்கள் சுருங்கிவிட்டதாக உயர்நீதிமன்றம் வேதனை
கொரோனா தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பியதாக வழக்கு : நடிகர் மன்சூர் அலிகான் முன் ஜாமீன் கோரி மனு
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடுகள் நடைபெற வாய்ப்புகளே இல்லை: சத்யபிரதா சாகு
தமிழகத்தில் இரவு நேரங்களில் இயக்கப்படும் அரசு விரைவுப் பேருந்துகள் நாளை முதல் பகலில் இயக்கப்படும்: அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் அறிவிப்பு
அரசியல் வேறுபாடுகள் கடந்து கொரோனாவுக்கு எதிராக அனைவரும் இணைந்து உழைக்க வேண்டும் : எல்.முருகன் வேண்டுகோள்!!
தேர்தல் வெற்றிக்காக திருப்பதியில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பிரார்த்தனை : அதிமுக யாருக்கும் அடிமை இல்லை என பேட்டி
ஸ்பெயினில் வகுப்பறையாக மாறிய கடற்கரை!: தனிமனித இடைவெளியுடன் ஆர்வமுடன் கல்வி கற்கும் மாணவர்கள்..!!
19-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!
தீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு!: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..!!