கொலை வழக்கில் 3 பேர் கைது
2021-01-05@ 03:57:26

விஜயபுரா: குடிபோதையில் தாபா உரிமையாளரை கொடூரமாக தாக்கி கொலை செய்துவிட்டு தப்பிச்சென்ற மூன்று பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விஜயபுரா தாலுகா ரத்தினபுரி கிராஸ் அருகே தாபா நடத்தி வருபவர் மகாதேவப்பா கவுலகி. கடந்த 1ம் தேதி இவருடைய தாபாவுக்கு குடிபோதையில் மூன்று பேர் சாப்பிட வந்தனர். சாப்பிட்டு முடித்தவர்களிடம் மகாதேவப்பா பில் கேட்டபோது எங்களிடமே பில் கேட்கிறாயா என்று கூறி மூன்று பேரும் தாபா உரிமையாளர் மகாதேவப்பாவை சரமாரியாக தாக்கினர். இதில் மகாேதவப்பா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதை தொடர்ந்து, அவர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து திக்கோட்டா போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய கொலையாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டதாக சந்தோஷ் பாண்டுரங்க பஜபலே, சந்தீப் மற்றும் தசரதன் ஆகிய மூன்று பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
அம்பத்தூர் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட இன்ஜினியர் உள்பட 2 பேர் கைது: 40 சவரன் பறிமுதல்
2வது கணவரை கொன்று வீட்டில் புதைப்பு கள்ளக்காதலனுடன் மனைவி அதிரடி கைது
பெண் போலீசுக்கு பாலியல் தொல்லை தஞ்சை போலீஸ்காரர் சஸ்பெண்ட்
சிறுமிக்கு பாலியல் தொல்லை வாலிபருக்கு 20 ஆண்டு சிறை
தஞ்சை அருகே மணல் கடத்தல் தகராறில் பாஜ பெண் நிர்வாகி வீடு சூறை: அதிமுக பிரமுகர் உள்பட 12 பேர் கைது
அந்தியூர் பகுதியில் கள்ளநோட்டு அச்சிட்ட 2 பேர் பிடிபட்டனர்: ரூ.2 லட்சம், பிரிண்டர் பறிமுதல்
18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!
தீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு!: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..!!
22-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்
15-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்