சேதமடைந்த பேருந்து நிறுத்தம் மதுக்கூடமாக மாறிவரும் அவலம்: நடவடிக்கை எடுக்க மக்கள் வலியுறுத்தல்
2020-12-31@ 15:55:38

சேதுபாவாசத்திரம்: சேதுபாவாசத்திரம் அருகே நெல்லியடிக்காடு கிராமத்தில் சேதமடைந்த பேருந்து நிறுத்தம் மதுக்கூடமாக மாறி வருகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சேதுபாவாசத்திரம் அருகில் உள்ள நெல்லியடிக்காடு கிராமத்தில் பழமைவாய்ந்த பேருந்து நிறுத்தம் உள்ளது. இந்த பேருந்து நிறுத்தம் மேல்பகுதியில் உள்ள சிமென்ட் காரைகள் முழுவதும் பெயர்ந்து மோசமான நிலையில் உள்ளது. அடிக்கடி மேல் பகுதியில் உள்ள சிமென்ட் காரைகள் பெயர்ந்து விழுவதால் பயணிகள் யாரும் இந்த பேருந்து நிறுத்தத்தை கடந்த சில ஆண்டுகளாக பயன்படுத்தவில்லை.
இதனால் இப்பகுதியில் உள்ள மது பிரியர்கள் இந்த பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்துவதால் மதுக்கூடமாக மாறியுள்ளது. பல்வேறு முறை இந்த பேருந்து நிறுத்தத்தை இடித்து அப்புறப்படுத்தி விட்டு புதிய பேருந்து நிறுத்தம் அமைத்துத்தர அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தும் இதுவரை எவ்வித பயனும் கிடையாது. பேருந்து நிறுத்தத்தில் இரவு நேரங்களில் பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்தி மது அருந்துவதால் அந்த வழியாக செல்லக்கூடிய பெண்கள் அச்சத்துடன் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது.
எனவே சேதமடைந்த பேருந்து நிறுத்தத்தை இடித்து விட்டு புதிய பேருந்து நிறுத்தம் அமைக்க வேண்டும். மேலும் பேருந்து நிறுத்தத்தில் மது அருந்துவதை தடுத்து நிறுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் சப்ளையில் ஏற்பட்ட சிக்கலால்தான் 7 நோயாளி இறப்பு: திடுக்கிடும் தகவல்கள்
கொரோனா பரவலை கட்டுப்படுத்த 23ல் அமல்..! புதுச்சேரியில் சனி, ஞாயிறு முழு ஊரடங்கு
திருமணம் ஆகாமலேயே ஆசிரியை கர்ப்பம்: வீட்டில் பிரசவம் பார்த்ததில் தாய், குழந்தை உயிரிழப்பு: குழந்தை சடலம் கிணற்றில் வீச்சு
சீரான மும்முனை மின்சாரம் வழங்காததால் 70,000 ஏக்கர் நெற்பயிர்கள் நீரின்றி கருகும் அவலம்: அரக்கோணம், நெமிலியில் விவசாயிகள் வேதனை
நாகை மாவட்டத்தில் பதிவான வாக்கு இயந்திரம் உள்ள கட்டிடம் மீது பறந்த ட்ரோன்: சென்னையை சேர்ந்த 3 பேர் சிக்கினர்
வாக்கு எண்ணிக்கை மையத்தில் 96 மர்ம காலி டிரங்க் பெட்டிகள்: தேனியில் பரபரப்பு
இன்றைய சிறப்பு படங்கள்
செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக பறந்த ஹெலிகாப்டர்!: புதிய வரலாற்று சாதனை படைத்து அசத்திய நாசா விஞ்ஞானிகள்..!!
ஹங்கேரியில் களை கட்டுகிறது தடுப்பூசி கேக் விற்பனை!: ஃபைசர், மாடர்னா, ஆஸ்ட்ரா ஜெனிகா கேக் வகைகளுக்கு மவுசு அதிகம்..!!
எகிப்தில் பயணிகள் ரயில் தடம் புரண்டு கோர விபத்து!: 11 பேர் உடல் நசுங்கி பலி.. 98 பேர் படுகாயம்..!!
கொரோனா அச்சம் காரணமாக டெல்லியில் ஒரு வாரம் லாக்டவுன் : பல்லாயிரக்கணக்கில் வெளியேறிய வெளிமாநில தொழிலாளர்கள்