நெல்லையப்பர் கோயிலில் ஆருத்ரா தரிசனம்: இன்று அதிகாலை நடந்தது
2020-12-30@ 20:22:22

நெல்லை: நெல்லை டவுன் நெல்லையப்பர் கோயிலில் மார்கழி திருவாதிரை திருவிழா கொரோனா விதிமுறைகளை பின்பற்றி கடந்த 21ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சுவாமி, அம்பாள், நடராஜர், சிவகாமி அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார, தீபாராதனை நடந்தது. 9ம் திருநாளான நேற்று தாமிரசபையில் நடராஜருக்கு திருநீராட்டு அபிஷேகம் நடந்தது.
திருவிழாவின் சிகரமாக நடராஜரின் ஆருத்ரா தரிசனத்தை காண இன்று அதிகாலை முதலே பக்தர்கள் குவியத் துவங்கினர். அதிகாலை 3 மணிக்கு பசு தீபாராதனை, தொடர்ந்து நடராஜரின் திருநடன காட்சியான ஆருத்ரா தரிசனமும் நடந்தது. இதை நெல்லை மற்றும் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட திரளானோர் தரிசித்தனர்.
இதேபோல் பாளை திரிபுராந்தீஸ்வரர் கோயில், வண்ணார்பேட்டை அருணாசலேஸ்வரர் கோயில், சந்திப்பு கைலாசநாதர் கோயில், சொக்கநாதர் கோயில், தச்சநல்லூர் நெல்லையப்பர் கோயில், குறிச்சி சொக்கநாதர் கோயில், டவுன் தொண்டர்கள் நயினார் சன்னதி கோயில் உள்ளிட்ட மாநகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள சிவாலயங்களிலும் ஆருத்ரா தரிசனத்தை பெண்கள் உள்ளிட்ட திரளானோர் தரிசித்தனர்.
மேலும் செய்திகள்
வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் சப்ளையில் ஏற்பட்ட சிக்கலால்தான் 7 நோயாளி இறப்பு: திடுக்கிடும் தகவல்கள்
கொரோனா பரவலை கட்டுப்படுத்த 23ல் அமல்..! புதுச்சேரியில் சனி, ஞாயிறு முழு ஊரடங்கு
திருமணம் ஆகாமலேயே ஆசிரியை கர்ப்பம்: வீட்டில் பிரசவம் பார்த்ததில் தாய், குழந்தை உயிரிழப்பு: குழந்தை சடலம் கிணற்றில் வீச்சு
சீரான மும்முனை மின்சாரம் வழங்காததால் 70,000 ஏக்கர் நெற்பயிர்கள் நீரின்றி கருகும் அவலம்: அரக்கோணம், நெமிலியில் விவசாயிகள் வேதனை
நாகை மாவட்டத்தில் பதிவான வாக்கு இயந்திரம் உள்ள கட்டிடம் மீது பறந்த ட்ரோன்: சென்னையை சேர்ந்த 3 பேர் சிக்கினர்
வாக்கு எண்ணிக்கை மையத்தில் 96 மர்ம காலி டிரங்க் பெட்டிகள்: தேனியில் பரபரப்பு
இன்றைய சிறப்பு படங்கள்
செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக பறந்த ஹெலிகாப்டர்!: புதிய வரலாற்று சாதனை படைத்து அசத்திய நாசா விஞ்ஞானிகள்..!!
ஹங்கேரியில் களை கட்டுகிறது தடுப்பூசி கேக் விற்பனை!: ஃபைசர், மாடர்னா, ஆஸ்ட்ரா ஜெனிகா கேக் வகைகளுக்கு மவுசு அதிகம்..!!
எகிப்தில் பயணிகள் ரயில் தடம் புரண்டு கோர விபத்து!: 11 பேர் உடல் நசுங்கி பலி.. 98 பேர் படுகாயம்..!!
கொரோனா அச்சம் காரணமாக டெல்லியில் ஒரு வாரம் லாக்டவுன் : பல்லாயிரக்கணக்கில் வெளியேறிய வெளிமாநில தொழிலாளர்கள்