நண்பர்களுடன் பாலாற்றில் குளித்தபோது தண்ணீரில் மூழ்கி வாலிபர் பலி
2020-12-29@ 00:43:26

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே குருவிமலை பாலாற்றில், நண்பர்களுடன் குளித்த வாலிபர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.காஞ்சிபுரம், திருவள்ளுவர் நகர், தம்பிரான்கோட்டையை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மகன் பாலாஜி (18). பிளஸ் 2 முடித்துவிட்டு, அதே பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க்கில் வேலை செய்து வந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் பாலாஜி, தனது நண்பர்கள் அதே பகுதியை சேர்ந்த ராமமூர்த்தி (18), சந்துரு (24), ஜான் (17), விஷால் (13), விஜய் (17), கோபி (17) ஆகியோருடன் குருவிமலை அருகே பாலாற்றில் குளிக்கச் சென்றார்.அங்கு பாலாஜி, பாலத்தின் கீழ் தேங்கியுள்ள நீரில் குளிப்பதற்காக கரையில் இருந்து நீச்சல் அடித்துக் கொண்டு ஆற்றின் நடுவே சென்றார். பின்னர் நீண்டநேரமாகியும் அவர் கரை திரும்பவில்லை. இதனல், நண்பர்கள், அலறி கூச்சலிட்டனர்.
அப்பகுதி மக்கள் வந்து, ஆற்றில் குதித்து, வாலிபரை தேடினர். ஆனால் கிடைக்கவில்லை. தகவலறிந்து, காஞ்சிபுரம் தீயணைப்பு நிலையத்தில் இருந்து மீட்பு படையினர் வந்து, தண்ணீரில் மூழ்கிய பாலாஜியை சடலமாக மீட்டனர். இதையடுத்து மாகரல் போலீசார், சடலத்தை கைப்பற்றி காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
மேலும் செய்திகள்
தமிழகத்தில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள சிலைகளை அகற்ற வேண்டும்: உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
நெல்லை - சென்னை: அதிகாலை 4.30 மணி முதல் காலை 9 மணி வரை பேருந்துகளை இயக்க அரசு விரைவு போக்குவரத்து கழகம் முடிவு
தமிழகத்தில் பொது இடங்களில் உள்ள அனுமதி பெறாத சிலைகளை அகற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
திருச்சி ரயில்வே மருத்துவமனையில் தடுப்பூசி தட்டுப்பாடு; கடந்த 2 நாட்களாக தடுப்பூசி போடும் பணி நிறுத்தம்..!
மாவட்டத்தில் கொரோனா தடுப்பு விதிமுறைகள் கடுமையாக பின்பற்றப்படும்: தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை: நெல்லை ஆட்சியர் பேட்டி.!!!!
கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் நிகழ்வை நடத்த உத்தரவிட முடியாது: உயர்நீதிமன்ற மதுரை கிளை திட்டவட்டம்..!
ஸ்பெயினில் வகுப்பறையாக மாறிய கடற்கரை!: தனிமனித இடைவெளியுடன் ஆர்வமுடன் கல்வி கற்கும் மாணவர்கள்..!!
19-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!
தீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு!: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..!!