ஆயுதப்படை காவலர் விஷம் குடித்து தற்கொலை: கடிதம் சிக்கியது
2020-12-27@ 02:23:07

சென்னை: சென்னை பெரியமேட்டில் உள்ள ஒரு லாட்ஜில், விஷம் குடித்து ஆயுதப்படை காவலர் தற்கொலை செய்து கொண்டார். தற்ெகாலைக்கு முன்பாக அவர் எழுதியிருந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டம், பழைய வண்டி பாளையத்தை சேர்ந்தவர் சுரேஷ் (26). இவர் கடந்த 2013ம் ஆண்டு முதல், சென்னை புதுப்பேட்டை ஆயுதப்படையில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த 16ம் தேதியில் இருந்து சுரேஷ், பணிக்கு வரவில்லை. இந்நிலையில் சக காவலர்கள் பணிக்கு வராதது குறித்து சுரேஷிடம் கேட்டனர்.
சொந்த வேலை இருப்பதால் 19ம் தேதி முதல் பெரியமேடு காவல் நிலையம் அருகே உள்ள லாட்ஜில் தங்கி இருப்பதாக கூறி உள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் சுரேஷ் தங்கி இருந்த அறை நீண்ட நேரமாக திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த லாட்ஜ் ஊழியர்கள், மாற்று சாவி மூலம் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது சுரேஷ் அசைவற்று கிடந்தார். இது குறித்து பெரியமேடு காவல் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் சுரேஷ் உடலை பிரேதபரிசோதனைக்காக ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பின்னர், சுரேஷ் தங்கியிருந்த அறையில் இருந்து ஒரு கடிதம் இருந்தது. அதில், தன் தற்கொலைக்கு காரணம் வேறு யாரும் இல்லை.
என்னுடைய சுய முடிவு. யாரையும் தொந்தரவு செய்ய வேண்டாம்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. தற்கொலைக்கு காதல் பிரச்னையா. பணிச்சுமை காரணமா. உயரதிகாரிகள் திட்டினார்களா உள்ளிட்ட பல கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
தமிழகத்தில் தினசரி பாதிப்பு 13,000ஐ தாண்டியது: கொரோனாவால் ஒரே நாளில் 13,776 பேர் பாதிப்பு; 78 பேர் பலி...சுகாதாரத்துறை அறிக்கை.!!!
வடசென்னை அனல் மின்நிலையத்தில் தொழில்நுட்ப கோளாறு: மின் உற்பத்தி பாதிப்பு..!
ஆன்லைன் முறையை பயன்படுத்துங்கள்..! தமிழகத்தில் முழு ஊரடங்கு நாட்களில் ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் இயங்காது: தெற்கு ரயில்வே அறிவிப்பு
கொரோனா தடுப்பூசி தொடர்பான அவதூறு வழக்கு: முன்ஜாமின் கோரி மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மன்சூர் அலிகான் மனுத்தாக்கல்..!
முதல்வர் பழனிசாமியுடன் தலைமைச்செயலர் ராஜூவ்ரஞ்சன், சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன் சற்று நேரத்தில் சந்திப்பு
அதிமுக பொதுக்குழு கூட்டத்தை செல்லாது என அறிவிக்கக் கோரி சசிகலா தொடர்ந்த வழக்கு: ஜூன் 18-ம் தேதிக்கு ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்..!
23-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆக்சிஜன் வாயு கசிந்து விபத்து: நாசிக் மருத்துவமனையில் மூச்சுத்திணறி 24 நோயாளிகள் பரிதாப மரணம்..!!
ஆக்சிஜன் சிலிண்டர் நிரப்பும் மையங்களுக்கு படையெடுக்கும் மக்கள்; இரவு, பகலாக நீண்ட வரிசையில் காத்திருப்பு; இந்தியாவில் அவலநிலை!!
குவியல் குவியலாக கொரோனா சடலங்கள் எரிப்பு.. ஆம்புலன்சில் காத்து கிடைக்கும் நோயாளிகள்.. கண்ணீர் ததும்ப வைக்கும் படங்கள்!!
அமெரிக்காவில் போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் கருப்பின சிறுமி பலி!: வெடித்தது பெரும் போராட்டம்..!!