சாதி, மத வெறியர்களால் முடியாது என்பதால் நடிகர்களை இறக்கி விட்டு காலூன்ற பார்க்கிறார்கள்: திருமாவளவன் பரபரப்பு பேச்சு
2020-12-25@ 00:09:17

சென்னை: சாதி மத வெறியர்களால் நேரடியாக எதுவும் செய்ய முடியாது என்பதால், நடிகர்களை இறக்கி விட்டு காலூன்ற பார்க்கிறார்கள் என்று திருமாவளவன் கூறினார். சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் நடந்த விருது வழங்கும் விழாவில் பெரியார் பன்னாட்டு அமைப்பினர் அமெரிக்காவில் இருந்து காணொலி வாயிலாக கலந்துகொண்டு உரையாற்றினர். இதில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி மற்றும் மருத்துவர் மீனாம்பாள் ஆகியோர் ”சமூக நீதிக்கான கி.வீரமணி விருதையும்” ரூபாய் ஒரு லட்சத்திற்கான காசோலையும் திருமாவளவனுக்கு வழங்கினர். நிகழ்ச்சியில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, விசிக வன்னியரசு, துணை பொது செயலாளர் எஸ்.எஸ்.பாலாஜி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். விருது பெற்ற திருமாவளவன் பேசியதாவது:
எனது பொது வாழ்வை அங்கீகரிக்கும் விதமாக இந்த விருதை பெறுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். திருமாவளவனை தனிமைப்படுத்த வேண்டும். விடுதலை சிறுத்தைகள் கட்சியை அரசியலில் இருந்து ஒதுக்க வேண்டும் என செயல்படும் கட்சிகளுக்கு பதிலளிக்கும் விதமாக, திருமாவளவனை தனிமைப்படுத்த முடியாது. சாதி மத வெறியர்களால் நேரடியாக எதுவும் செய்ய முடியாது என்று தெரிந்து, நடிகர்களை இறக்கி விட்டு காலூன்ற பார்க்கிறார்கள். அதனை ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம். அதனை வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.க. உடன் சேர்ந்து முறியடிப்போம். இவ்வாறு அவர் பேசினார்.
மேலும் செய்திகள்
முதலமைச்சரின் உரையை விமர்சிப்பது அண்ணாமலையின் அரைவேக்காட்டுத்தனம்” -சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் காட்டம்..!
பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சியில் தமிழகத்திற்கான தேவைகளைதான் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசி இருக்கிறார்: அண்ணாமலை பேச்சுக்கு துரை வைகோ பதிலடி
சொல்லிட்டாங்க...
ஐதராபாத்தில் மோடி பேச்சு தெலங்கானாவில் ஆட்சி இனிதான் ஆட்டம் ஆரம்பம்
மாநிலங்களவை வேட்பாளர் யார்? சோனியா காந்தியுடன் கே.எஸ்.அழகிரி சந்திப்பு
பிரதமரின் வருகையால் தமிழகத்துக்கு பல நன்மை கிடைக்கப்போகிறது: தமிழக பாஜ தலைவர் அறிக்கை
மோசமான நிலையில் இலங்கை..!! பொருளாதார நெருக்கடியில் அல்லல்படும் மக்கள்
மூடுபனிக்கு நடுவே காட்சியளிக்கும் சிட்னி நகரம்!: பனியால் மூடப்பட்ட பிரம்மாண்ட வானுயர்ந்த கட்டிடங்கள்..!!
ஒரே மேடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்- பிரதமர் மோடி : தமிழகத்தில் ரூ.31,500 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடக்கி வைத்தார்!!
பெரு நாட்டில் களைகட்டிய கோமாளிகள் தினம்.!! குழந்தைகளுடன் மக்கள் உற்சாக வரவேற்பு
ஏற்காட்டில் கோடை விழா: பட்டாம்பூச்சி, சின்சான் உருவம், மஞ்சப்பை உள்ளிட்ட வடிவங்கள் மலர்களால் வடிவமைப்பு!!