ஜிப்சம் மூலம் ரூ.1.33 கோடி வருவாய்: ரயில்வே தகவல்
2020-12-24@ 03:27:51

சென்னை: சென்னை துறைமுகத்திலிருந்து 28,377 டன் ஜிப்சம், ஏற்றிச் செல்லப்பட்டு சுமார் ரூ. 1.33 கோடி வருவாய் ஈட்டியுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் ஜிப்சம் சரக்குகளை சென்னை துறைமுகத்திலிருந்து கர்நாடக மாநிலம், பிடதியிலுள்ள செயின்ட் கோபைன் நிறுவனத்திற்கு கடந்த 3ம் தேதி முதல் சரக்கு ரயிலை இயக்கியது. இதுவரை 10 சரக்கு ரயில்களில் 28,377 டன் ஜிப்சம் ஏற்றிச்சென்றது. இந்த புதிய சரக்கு போக்குவரத்து மூலம் ரயில்வே நிர்வாகத்திற்கு ரூ1.33 கோடி வருவாய் கிடைத்துள்ளது. வணிக மேம்பாட்டு பிரிவு குழுவின் தளரா முயற்சிகள், இதுபோன்ற புதுவகை சரக்கு இயக்கத்தை உறுதி செய்துள்ளன. மேலும் தொழில் நிறுவனங்களுடான நல்லுறவு, நல்நம்பிக்கை ஏற்படுத்திக் கொள்வதன்மூலம் புதுவகை சரக்கு போக்குவரத்து சாத்தியமாக்கியுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Tags:
Gypsum revenue of Rs 1.33 crore railway information ஜிப்சம் ரூ.1.33 கோடி வருவாய் ரயில்வே தகவல்மேலும் செய்திகள்
தமிழகத்தில் இரவு நேரங்களில் இயக்கப்படும் அரசு விரைவுப் பேருந்துகள் நாளை முதல் பகலில் இயக்கப்படும்: அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் அறிவிப்பு
அரசியல் வேறுபாடுகள் கடந்து கொரோனாவுக்கு எதிராக அனைவரும் இணைந்து உழைக்க வேண்டும் : எல்.முருகன் வேண்டுகோள்!!
தேர்தல் வெற்றிக்காக திருப்பதியில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பிரார்த்தனை : அதிமுக யாருக்கும் அடிமை இல்லை என பேட்டி
தமிழகத்தில் கூடுதல் கொரோனா தடுப்பூசிகள் இன்று வர உள்ளதாக தகவல்
முதல்வர் எடப்பாடி பழனிசாமி மருத்துவமனையில் அனுமதி: 3 நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற உள்ளார் என தகவல்..!
புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதுங்க..!! மே மாதம் ஆன்லைனில் நடைபெறும் செமஸ்டர் தேர்வில் மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி
ஸ்பெயினில் வகுப்பறையாக மாறிய கடற்கரை!: தனிமனித இடைவெளியுடன் ஆர்வமுடன் கல்வி கற்கும் மாணவர்கள்..!!
19-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!
தீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு!: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..!!