18ம் கால்வாய் நீர்வரத்தால் நிரம்பிய கண்மாய்கள்: தேவாரம் பகுதியில் நிலத்தடி நீர் உயர்வு
2020-12-21@ 15:30:19

தேவாரம்: பதினெட்டாம் கால்வாய் நீர்வரத்தால், தேவாரம் பகுதியில் கண்மாய்கள் நிறைந்துள்ளன. இதனால், அப்பகுதியில் நிலத்தடி நீரும் உயர்ந்துள்ளது.தேவாரம் பகுதியில் சின்னதேவியம்மன், பெரியதேவியம்மன் கண்மாய்கள் உள்ளிட்ட பல்வேறு குளங்கள் உள்ளன.கடந்த மாதம் 18ம் கால்வாயிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டதாலும், தொடர் மழையாலும் கண்மாய்களுக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. இதனால், இப்பகுதியில் நிலத்தடி நீர் உயர்ந்துள்ளது.
பல இடங்களில் கண்மாய், குளங்களில் தண்ணீர் நிரம்பியுள்ளதால், தேவாரம் பேரூராட்சியிலும், அதனைச் சுற்றியுள்ள 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. தென்னந்தோப்புகள் மற்றும் தோட்டங்களில் உள்ள கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.இது குறித்து அவர்கள் கூறுகையில், ‘18ம் கால்வாய் தண்ணீரால் நிலத்தடி நீர் உயர்ந்து கண்மாய், குளங்கள் நிறைந்துள்ளன. இதனால், விவசாயத்து தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாது’ என்றனர்.
மேலும் செய்திகள்
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வரும் 6ம் தேதி உள்ளூர் விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
கேளம்பாக்கம் அருகே ஷேர் ஆட்டோ மீது கார் மோதி 2 பெண்கள் பரிதாப பலி: 7 பேர் படுகாயம்
திருவாரூர் அருகே பயங்கரம்: விசி பிரமுகர் வெட்டிக்கொலை.! பாஜ பிரமுகர் உள்பட 6 பேர் கைது
கல்வியையும், மருத்துவத்தையும் திமுக ஆட்சி இரண்டு கண்களாக பார்க்கிறது: வேலூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
காட்டுநாவல் ஊராட்சியில் குண்டும், குழியுமான சாலை சீரமைக்கப்படுமா?
ஆண்டிமடம் பகுதியில் மழைநீர் வடிகால் பணியை விரைந்து முடிக்க வேண்டும்-வியாபாரிகள் கோரிக்கை
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!