67 ஆண்டுகளுக்கு பின் ஏர் இந்தியாவை கைப்பற்ற இருக்கும் டாடா?.. 51% பங்குகளை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல்
2020-12-14@ 16:45:17

டெல்லி: டாடா குழுமம் 67 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஏர் இந்தியா விமான நிறுவனத்தை கைப்பற்ற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் முதல்முறையாக 1932-ம் ஆண்டு டாடா ஏர்லைன்ஸ் தொடங்கப்பட்டது. பின்னர் அதன் பெயரை 1946-ல் ஏர் இந்தியா என டாடா குழுமம் மாற்றியது. 1963-ம் ஆண்டு ஏர் இந்தியா விமான நிறுவனம் அரசுடமை ஆக்கப்பட்டது. 1995-ல் விமான நிறுவனம் தொடங்கும் முயற்சி தோல்வியில் முடிய 2001-ல் ஏர் இந்தியாவை வாங்கும் முயற்சியும் தோல்வி அடைந்தது. ஆனால் இந்த துறையில் இருந்து பின்வாங்காத டாடா குழுமம், 2013 முதல் ஏர் ஏசியா இந்தியா மற்றும் விஸ்தாரா என என 2 விமான நிறுவனங்களில் பங்குதாரராக உள்ளது.
இந்த நிலையில் 52 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் மூழ்கி இருக்கும் ஏர் இந்தியாவை மீண்டும் கைப்பற்ற டாடா குழுமம் முன்வந்துள்ளது. ஏர் இந்தியாவை வாங்கும் ஏல நடவடிக்கையில் பங்கேற்பதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க இன்று கடைசி நாள். இதுவரை டாடா, அதானி, ஹிந்துஜா குழுமங்கள் ஏர் இந்தியாவை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் உடன் இணைந்து டாடா குழுமம் ஏர் இந்தியாவின் 51% பங்குகளையும் வாங்க விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் செய்திகள்
கொரோனாவை கட்டுப்படுத்த தவறிய பிரதமர் மோடி பதவி விலக வேண்டும்.. தேசிய அளவில் டிரெண்டாகும் #ResignModi ஹேஷ்டேக்
கடந்த ஆண்டைப்போன்று மீண்டும் அரங்கேறும் பரிபாதக் காட்சிகள்: நெடுஞ்சாலைகளில் நடக்கத் தொடங்கிய புலம்பெயர் தொழிலாளர்கள்
பலூன்களால் அலங்கரித்தல்... சாதனைகளை விளக்கும் உரை...புகைப்படம் எடுத்தல் :ஆக்சிஜன் லாரியை வைத்து அற்ப விளம்பரம் செய்த பாஜக!!
சித்தூரில் நோய் தொற்று அபாயம் நீவா நதியில் கலக்கும் கழிவுநீர்-நடவடிக்கை எடுக்க கோரிக்கை
திருச்சுழி தொகுதி தேர்தல் விவகாரம்!: திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்..!!
கும்பமேளாவில் பங்கேற்ற 19 கொரோனா நோயாளிகள் உத்தராகண்ட் மருத்துவமனையில் இருந்து தப்பி ஓட்டம் :பீதியில் வடஇந்தியா!!
ஸ்பெயினில் வகுப்பறையாக மாறிய கடற்கரை!: தனிமனித இடைவெளியுடன் ஆர்வமுடன் கல்வி கற்கும் மாணவர்கள்..!!
19-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!
தீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு!: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..!!