ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பலி
2020-12-13@ 01:26:00

சென்னை: தி.நகர் தனியார் துணிக்கடை அருகே கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்டோ ஓட்டி வந்தவர் ஜெகதீசன் (48). இவர், நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் இருந்து பயணி ஒருவரை சவாரி ஏற்றிக்கொண்டு மூப்பரப்பன் தெரு வழியாக சென்றுள்ளார். அப்போது, அந்த தெருவில் உள்ள கழிவுநீர் கால்வாய் மூடி மீது ஆட்டோ சக்கரம் ஏறியபோது, திடீரென மூடி உடைந்து ஆட்டோ கவிழ்ந்தது. இதில் ஜெகதீசனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடன் சென்ற பயணி, காயங்களுடன் தப்பினார். அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து, ஜெகதீசனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகள்
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடுகள் நடைபெற வாய்ப்புகளே இல்லை: சத்யபிரதா சாகு
தமிழகத்தில் இரவு நேரங்களில் இயக்கப்படும் அரசு விரைவுப் பேருந்துகள் நாளை முதல் பகலில் இயக்கப்படும்: அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் அறிவிப்பு
அரசியல் வேறுபாடுகள் கடந்து கொரோனாவுக்கு எதிராக அனைவரும் இணைந்து உழைக்க வேண்டும் : எல்.முருகன் வேண்டுகோள்!!
தேர்தல் வெற்றிக்காக திருப்பதியில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பிரார்த்தனை : அதிமுக யாருக்கும் அடிமை இல்லை என பேட்டி
தமிழகத்தில் கூடுதல் கொரோனா தடுப்பூசிகள் இன்று வர உள்ளதாக தகவல்
முதல்வர் எடப்பாடி பழனிசாமி மருத்துவமனையில் அனுமதி: 3 நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற உள்ளார் என தகவல்..!
ஸ்பெயினில் வகுப்பறையாக மாறிய கடற்கரை!: தனிமனித இடைவெளியுடன் ஆர்வமுடன் கல்வி கற்கும் மாணவர்கள்..!!
19-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!
தீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு!: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..!!