தேவாரம் மலையடிவாரத்தில் மீண்டும்... மக்னா: தொழிலாளர்கள் அச்சம்
2020-12-10@ 12:50:47

தேவாரம்: தேவாரம் மலையடிவாரத்தில் ஒற்றையாக திரியும் மக்னா யானை இதுவரை 13 தோட்ட தொழிலாளர்களை கொன்றுள்ளது. இதனை பிடிக்க கோரி விவசாயிகள் பல கட்ட போராட்டங்களை நடத்தி விட்டனர். ஆனால் யானையை பிடிக்க இதுவரை எந்த தீவிரமும் காட்டவில்லை. மக்னா யானையை பிடிக்க, நீலகிரியில் இருந்து 2 முறை கும்கி யானைகள் கொண்டு வரப்பட்டது. ஆனால் பலன் அளிக்காததால் அவை மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக மக்னா யானை தேவாரம் மலையடிவாரத்தில் ஹாயாக சுற்றி வருகிறது. நேற்று துளுவன் துள்ளிமேடு என்ற இடத்தில் உள்ள தென்னந்தோப்பில் மக்னா யானை உலா வந்தது.
இதை கண்டு வேலைக்கு சென்றவர்கள் ஓட்டம் பிடிக்க, சிலர் செல்போனில் படம் பிடித்தனர். தகவலறிந்ததும் தேவாரம் வனத்துறை பட்டாசுகளை போட்டு மக்னாவை விரட்டினர். தற்போது மலையடிவாரத்தை ஒட்டியுள்ள எள்ளுப்பாறை என்ற இடத்தில் மக்னா முகாமிட்டு உள்ளது. இதனால் விவசாயிகள், தோட்ட தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.
Tags:
மக்னாமேலும் செய்திகள்
மதுரை பூசாரிப்பட்டியில் 10 ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு
போடிமெட்டு அருகே தேயிலை தோட்டத்தில் புலி நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்
தென்காசி கடத்தல் விவகாரத்தில் மீண்டும் பரபரப்பு; வழக்கை வாபஸ் வாங்கக் கோரி காதல் கணவனிடம் இளம்பெண் கதறல்: `இருவரும் மனப்பூர்வமாக பிரிந்து விடுவோம்’ என்று வேண்டுகோள்
நாளை தைப்பூசத் திருவிழா: திருச்செந்தூரில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்
அதிகரிக்கும் குற்றச்செயல்கள்: சிம்கார்டுகளை கூவிகூவி விற்பதை தடுக்க கோரிக்கை
வளர்ப்பு யானைகளை பராமரிக்கும் பயிற்சி பெற தெப்பக்காடு முகாம் பாகன்கள் 8 பேர் தாய்லாந்து பயணம்
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!