ஏசியில் புகுந்த நல்ல பாம்பு
2020-12-08@ 01:14:18

பூந்தமல்லி: பூந்தமல்லி அடுத்த சென்னீர்குப்பம் பகுதியில் ரஞ்சித்குமார் என்பவர் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவர், நேற்று காலை வழக்கம்போல் கடையை திறந்து வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது கடையில் பொருத்தப்பட்டிருந்த ஏ.சி. இயந்திரத்திற்குள் இருந்து “உஷ், உஷ்” என்று சத்தம் கேட்டது. மேலும், ஏசி மெஷினில் பாம்பின் வால் வெளியே நீட்டிக்கொண்டு இருந்தது. அதிர்ச்சியடைந்த ரஞ்சித்குமார், உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார். தகவலறிந்த வனத்துறையினர் கடைக்குள் இருந்த ஏ.சி.இயந்திரத்தை கழற்றி உள்ளே பார்த்தபோது சுமார் 6 அடி நீள நல்ல பாம்பு இருந்தது. வனத்துறையினர் அதனை லாவகமாக பிடித்து எடுத்துச் சென்றனர்.
மேலும் செய்திகள்
திருச்சி ரயில்வே மருத்துவமனையில் தடுப்பூசி தட்டுப்பாடு; கடந்த 2 நாட்களாக தடுப்பூசி போடும் பணி நிறுத்தம்..!
மாவட்டத்தில் கொரோனா தடுப்பு விதிமுறைகள் கடுமையாக பின்பற்றப்படும்: தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை: நெல்லை ஆட்சியர் பேட்டி.!!!!
கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் நிகழ்வை நடத்த உத்தரவிட முடியாது: உயர்நீதிமன்ற மதுரை கிளை திட்டவட்டம்..!
திருச்செங்கோட்டில் முதல் தடுப்பூசி போட்டவர்கள் 2-ம் கட்ட தடுப்பூசி போட இயலாமல் தவிப்பு
வள்ளியூரில் உள்ள குற்றவியல் நீதிமன்ற நீதிபதிக்கு கொரோனா தொற்று உறுதி
கோடை வெயில் சுட்டெரிப்பதால் காவேரிப்பாக்கம் ஏரி நீர்மட்டம் குறைந்தது-பாசனம் பாதிப்பதாக விவசாயிகள் கவலை
ஸ்பெயினில் வகுப்பறையாக மாறிய கடற்கரை!: தனிமனித இடைவெளியுடன் ஆர்வமுடன் கல்வி கற்கும் மாணவர்கள்..!!
19-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!
தீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு!: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..!!