வெலிங்டன் நீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு
2020-12-05@ 12:14:01

திட்டக்குடி : தொழுதூர் அணைக்கட்டில் இருந்து வெலிங்டன் நீர் தேக்கத்திற்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 4 நாட்களாக சூறாவளி காற்றுடன் கடும் மழை பெய்து வருகிறது. இதனால் திட்டக்குடியை அடுத்துள்ள கீழ்ச்செருவாய் கிராமத்தில் அமைந்துள்ள வெலிங்டன் நீர்தேக்கத்தில் தொழுதூர் அணைக்கட்டில் இருந்து வரத்து வாய்க்கால் மூலம் ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் வெலிங்டன் நீர் தேக்கத்தின் நீர்மட்டம் தற்போது 15 அடியாக உயர்ந்துள்ளது. வரத்து வாய்க்கால் மூலம் தண்ணீர் வந்து கொண்டிருப்பதாகவும், மேலும் நீர்மட்டம் உயரும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் செய்திகள்
புதுச்சேரி வீராம்பட்டினம் செங்கழுநீரம்மன் கோயிலில் ஆடித் தேரோட்டம்
இன்டர்நெட் மூலம் தோழிகளை விலை பேசிய கல்லூரி மாணவி
ஓட்டேரியில் கலைஞர் நினைவு தின பொதுக்கூட்டம்; கொள்கை ரீதியாக பிரதமரை எதிர்க்கும் ஒரே தலைவர் மு.க.ஸ்டாலின் மட்டுமே: காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பேச்சு
பிள்ளையார்பட்டியில் விநாயகர் சதுர்த்தி விழா 22ல் துவக்கம்: 31ம் தேதி தீர்த்தவாரி உற்சவம்
பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் 2 விசைப்படகுகள் கவிழ்ந்தது: 10 மீனவர்கள் தப்பினர்
ஓடும் ரயிலில் இருந்து இறங்கிய சென்னை போலீஸ்காரர் பலி
மத்தியதரைக் கடலில் குடியேறியவர்கள் பத்திரமாக மீட்பு..!!
ஆர்டிமிஸ் 1 திட்டத்துக்கான ஒத்திகையை தொடங்கியது நாசா
கடலுக்கு அடியில் அதிசய நகரம்: அழகிய ரோமன் நகரின் அற்புத காட்சி..!!
கலிபோர்னியாவை அச்சுறுத்தும் காட்டுத்தீ.. தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்!!
மெக்சிகோ சுரங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் முயற்சி தீவிரம்...