விவசாயிகள் போராட்டம் குறித்து சர்ச்சை பதிவு... உங்களுக்கு என்ன... ஜான்சி ராணியினு நெனப்பா? : கங்கனாவை வறுத்தெடுத்த மகளிர் ஆணைய தலைவி
2020-12-04@ 17:49:50

புதுடெல்லி, :விவசாயிகள் போராட்டம் குறித்து சர்ச்சை கருத்து பதிவிட்ட கங்கனாவை, டெல்லி மகளிர் ஆணைய தலைவி கடுமையாக சாடி டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். மத்திய பாஜக அரசுக்கு ஆதரவாக அவ்வப்போது கருத்துகளை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிக் கொள்ளும் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா, தற்போது புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருவது குறித்து கங்கனா வெளியிட்ட டுவிட்டில், ‘டெல்லி ஷாஹீன் பாக் போராட்டத்தில் (சிஏஏ) பங்கெடுத்த அதே மூதாட்டிதான் இவர்.
இவரைத்தான் டைம் பத்திரிகை இந்தியாவின் மிக சக்திவாய்ந்த பெண்மணியாக குறிப்பிட்டு பாராட்டியிருந்தது. இப்போது விவசாயிகள் போராட்டத்தில் இருக்கிறார். இவர் போராட்டத்தில் பங்கெடுத்துக் கொள்ள 100 ரூபாய் கொடுங்கள் போதும்’ என்று கூறியிருக்கிறார்.இந்த டுவிட்டால் கடும் கண்டனத்தை எதிர்கொண்ட கங்கனா, பின்னர் அதனை நீக்கிவிட்டார். இருந்தும் அவருக்கு எதிராக பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஹக்கம் சிங் என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்நிலையில், டெல்லி மகளிர் ஆணையத் தலைவர் சுவாதி மாலிவால் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஒரு வயதான பெண் குறித்து கங்கனா அவதூறு கருத்து பதிவிட்டுள்ளார். ஒரு சில படங்களில் நடத்திவிட்டு, டுவிட்டரில் அசிங்கமான கருத்துகளை பதிவிட்டு வரும் அவர் தன்னை சிங்கம் என்றோ, ஜான்சி ராணியாகக் கருதி உள்ளாரா?
இந்த நாட்டின் உண்மையான சிங்கம் கடின உழைப்பாளிகளான பெண்கள்தான். அவர்கள்தான், நாட்டை வளர்த்து, உணவளித்து, எல்லைகளையும் பாதுகாத்து வருகின்றனர். ‘ஒய்’ பிரிவு பாதுகாப்புடன் செல்வதால் அவர் தன்னை ஒரு சிங்கமாக கருதுகிறார் என்று நினைக்கிறேன். அவருக்கு தைரியம் இருந்தால், ஒரு நாள், வயலில் இறங்கி வேலை செய்யுங்கள். ஒரு நாளாவது எவ்வித பாதுகாப்பும் இல்லாமல் சாதாரண பெண்ணாக வெளியே வாருங்கள். ஏழை தொழிலாளியைப் போல் நடந்து கொள்ளுங்கள் பார்ப்போம். நாள் முழுக்க வேலை செய்துவிட்டு, உங்கள் வீட்டு வேலைகளை செய்து காட்டுங்கள்’ என்று காட்டமாக கருத்து பதிவிட்டுள்ளார்.
Tags:
கங்கனாமேலும் செய்திகள்
டிராகன் பழ வகைக்கு கமலம் என பெயர் மாற்றம் செய்தது குஜராத் அரசு... அரசியல் ஏதும் இல்லை என முதல்வர் விளக்கம்!!
தீர்வு எட்டப்படுமா?: டெல்லியில் விவசாய சங்கங்கள் - மத்திய அரசு இடையேயான 10-ம் கட்ட பேச்சுவார்த்தை தொடங்கியது..!!
பேரறிவாளனை விடுவிப்பது பற்றி குடியரசுத் தலைவர் தான் முடிவெடுக்க வேண்டும்..! உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்
டிராக்டர், பேரணிக்கு தடை விதிக்கக்கோரி மத்திய அரசு, டெல்லி போலீசார் தொடர்ந்த வழக்கை விசாரிக்க முடியாது : உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
மத்திய சுகாதாரத் துறை இணை செயலாளரான ஐஏஎஸ் அதிகாரியின் தம்பி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை வயலில் கிடந்த சடலத்தை மீட்டு விசாரணை
மஹிந்திரா குழுமம் உள்ளிட்ட பிரபல நிறுவனங்களின் ஊழியர்களுக்கு தடுப்பூசி : சொந்த செலவில் ஏற்பாடு செய்யும் தனியார் நிறுவனங்கள்
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!
ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்!!
20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்!!