தண்ணீர் குடிக்க சென்றபோது முதலை கடித்து சிறுவன் பலி: ரெய்ச்சூர் அருகே சோகம்
2020-12-04@ 00:17:55

ரெய்ச்சூர்: கிருஷ்ணா நதியில் தண்ணீர் குடிக்க இறங்கிய சிறுவன் முதலைக்கு பலியான சோக சம்பவம் ரெய்ச்சூரு அருகே நடைபெற்றது.ரெய்ச்சூரு தாலுகாவில் உள்ளது டொங்காராம்புரா கிராமம். இந்த கிராமத்தில் வசித்து வந்தவர் மல்லிகார்ஜூனா(12). மாநிலத்தில், தற்போது கொரோனா பாதிப்பு காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால், மல்லிகார்ஜூனா கடந்த சில நாட்களாக கூலி வேலைக்கு சென்றுள்ளான். குழந்தை தொழிலாளர்களுக்கு வேலை கொடுக்கக்
கூடாது என்று அதிகாரிகள் எச்சரித்ததால் நண்பர்களுடன் சேர்ந்து நேற்று முன்தினம் மாடு மேய்க்க சென்றுள்ளார்.
இந்த நிலையில், மதியம் சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிப்பதற்காக கிருஷ்ணா நதியில் இறங்கியுள்ளான். அப்போது, அவனை முதலை இழுத்து சென்றுள்ளது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த நண்பர்கள் கிராமத்திற்கு சென்று நடந்தவற்றை கூறியுள்ளனர்.இதைத்தொடர்ந்து, கிராம மக்கள் உள்ளூர் மீனவர்களின் படகுகளை கொண்டு தேடுதல் வேட்டை நடத்தியுள்ளனர். ஆனால், சிறுவன் கிடைக்கவில்லை. இந்நிலையில், நேற்று காலை சிறுவனின் தலைப்பகுதி மட்டும் கிடைத்துள்ளது. அவனை இழுத்து சென்ற முதலை உடல்பாகத்தை முழுவதும் தின்றுள்ளது. மனதை உருகவைக்கும் இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கிராம மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
பிரதமர் மோடிக்கு கொரோனா தடுப்பூசி..! நாட்டு மக்கள் தயக்கத்தில் இருந்து வெளிவர உதவும்: எய்ம்ஸ் இயக்குனர் பேட்டி
மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாக தேர்தல் நடத்துவதற்கு தேர்தல் ஆணையத்துக்குத் தடை விதிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு...!
தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் பீகார் அரசு: மாநிலத்தில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்....முதல்வர் நிதிஷ்குமார் அறிவிப்பு.!!!
ஆளுங்கட்சியின் முறைகேடு, அராஜகங்களை கண்டித்து திருப்பதி விமான நிலையத்தில் சந்திரபாபு நாயுடு தர்ணா!: போலீசாரிடம் ஆவேசம்..!!
“தடுப்பூசி போட்ட வலியே தெரியவில்லை”... புதுச்சேரி செவிலியரை புன்னகையுடன் பாராட்டிய பிரதமர் மோடி...!..
பக்க விளைவுகள் மிகக் குறைவு: எம்.பி., எம்.எல்.ஏக்கள், எதிர்க்கட்சியினரும் கொரோனா தடுப்பூசி போட்டுகங்க: மத்திய சுகாதார அமைச்சர் வேண்டுகோள்
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!: புகைப்படங்கள்
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி!: போராட்டக்காரர்கள் மீதான துப்பாக்கி சூட்டில் 18 பேர் பலி...உச்சக்கட்ட பதற்றம்..!!
இத்தாலியில் 2,000 ஆண்டுகள் பழமையான தேர் எரிமலை சாம்பலில் கிடைத்தது
01-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
28-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்