சேலம் மார்க்கெட்டிற்கு கொய்யாப்பழம் வரத்து அதிகரிப்பு: கிலோ ரூ40 முதல் ரூ50க்கு விற்பனை
2020-12-03@ 20:53:25

சேலம்: குடியாத்தம், ஆம்பூர் பகுதியில் இருந்து சேலம் மார்க்கெட்டிற்கு கொய்யாப்பழம் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கிலோ ரூ40 முதல் ரூ50 வரை விற்கப்படுகிறது. சேலம் ஆற்றோர மார்க்கெட்டில் இருக்கும் மொத்த வியாபார பழக்கடைகளுக்கு கடந்த ஒரு வாரமாக புதுச்சேரி மற்றும் குடியாத்தம், ஆம்பூர் பகுதியில் இருந்து கொய்யாப்பழம் வரத்து அதிகரித்துள்ளது. தினமும் 5 டன் அளவிற்கு வந்து விற்பனையாகிறது. இங்கிருந்து பெட்டிகளாக கொய்யாப்பழத்தை ரூ600க்கு (24 கிலோ) சில்லரை வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனர். இதர சில்லரை பழக்கடைகளிலும், சாலையோர பழக்கடைகளிலும் ஒரு கிலோ கொய்யாப்பழம் ரூ40 முதல் ரூ50 வரையில் விற்கப்படுகிறது.
நாட்டு கொய்யா (சிவப்பு), ரூ50க்கு விற்கின்றனர். இதுபற்றி வியாபாரிகள் கூறுகையில், “சேலம், தர்மபுரி சுற்று வட்டார பகுதிகளில் கொய்யா சீசன் முடிந்த நிலையில், தற்போது குடியாத்தம், ஆம்பூர் பகுதியில் இருந்து கொய்யா அதிகளவு வருகிறது. இதனை சில்லரை வியாபாரிகள் வாங்கிச் சென்று விற்கின்றனர். இந்த கொய்யா வரத்து இன்னும் ஒரு மாதத்திற்கு நீடிக்கும் என எதிர்பார்க்கிறோம்,’’ என்றனர்.
மேலும் செய்திகள்
டெல்லியில் விவசாயிகள் தாக்குதலை கண்டித்து இந்திய மாணவர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்
தைப்பூசத்தை முன்னிட்டு மாங்காடு காமாட்சி அம்மன் கோயில் தெப்பத்திருவிழா
காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி பொது பேரவை கூட்டம்
தேசிய வாக்காளர் தின போட்டியில் அரசினர் சிற்ப கல்லூரி மாணவர் முதலிடம்
மதுராந்தகம் ஒன்றியம் அரியனூர் ஊராட்சியில் நிறைவடையாமலே விளையாட்டு மைதான பணி முடிந்ததாக கல்வெட்டு: அதிகாரிகள் அலட்சியம் என குற்றச்சாட்டு
பெண்கள் பயணிக்க கூடுதல் பெட்டி அமைக்க காஞ்சிபுரம் எம்எல்ஏ கோரிக்கை மனு
28-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்
27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!